மாரி சீரியலில் சூர்யா, மாரி ஒன்றாக வருவதைப் பார்த்த தாரா,ஜாஸ்மின்  இருவரும் அதிர்ச்சியடையும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


மாரி சீரியல்:


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.


லிஃப்டில் சிக்கிய மாரியை காப்பாற்றிய சூர்யா, அவரை மருத்துவமனையில் காண்பித்து விட்டு வீட்டிற்கு அழைத்து வருகிறார். சூர்யா, மாரி ஒன்றாக வருவதைப் பார்த்த தாரா,ஜாஸ்மின்  இருவரும் அதிர்ச்சியடைகின்றனர்.  நடந்த விஷயத்தை வீட்டில் சொல்லி மாரியை  தூக்கிக்கொண்டு மேலே ரூமிக்கு சூர்யா செல்கிறார்.  அங்கு  நீ வீட்டுக்கு வர வேண்டியது தானே என்று கேட்க, நீங்க சொல்லாம நான் எப்படி வர முடியும் என மாரி பதிலளிக்கிறார்.






சரி எனக்கு போனாவது பண்ணி இருக்கலாம்ல என சூர்யா கேட்க,  மாரி தன்னிடம் போன் இல்லை என்று சொல்கிறார். இதன் பிறகு கீழே தாரா, ஜாஸ்மின், சங்கர பாண்டி என மூவரும் சூர்யா மாரியுடன் இருப்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  மறுநாள் காலை விக்ரம், ஹாசினியை பார்க்க வரும்போது மாரியிடம் பேசிக் கொள்கிறார். அப்போது மாரி விக்ரமை தனியாக அழைத்துக் கொண்டு தேவி அம்மாவை யார் கொன்றது என்று கேட்க, எனக்கு தெரியல என விக்ரம் சொல்கிறார்.


மேலும் 25 வருஷத்துக்கு முன்னாடி தேவியம்மா ஒரு மியூசிக் பாக்ஸ்ல ஒரு சீக்கிரட்டை மறச்சு வச்சுருக்காங்க. சூர்யாவுக்காக நாம மட்டும் அந்த மியூசிக் பாக்ஸ் இந்த வீட்ல எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சி எடுத்ததா உண்மை தெரிஞ்சிரும். கண்டிப்பா தேவி அம்மாவை கொலை பண்ணவங்களையும், அதே சமயம் சூர்யாவை கொல்ல வர்றவங்களையும் கண்டுபிடிக்க முடியும் என்று சொல்கிறார்.


அதுக்கு நீ தான் உதவி பண்ணனும் என்று சொல்ல இதை சங்கர பாண்டி கேட்கிறார்.  இதனையடுத்து டைனிங் டேபிளில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க ஏதோ ஒன்று விழுந்து ஒரு இசையை எழுப்புகிறது. அந்த இசையை கேட்டவுடன் தாராவிற்கு உடல் நடுங்குவதோடு மயக்கம் போட்டு விழுகிறாள். டாக்டர் வந்து செக் பண்ணிவிட்டு ஒன்னும் இல்லை என்று சொல்லி செல்கிறார். இதன்பிறகு தாரா அந்த மியூசிக் பாக்ஸை கண்டுபிடிக்கணும் இல்லன்னா அவ்வளவுதான் என்று புலம்பும் காட்சிகளோடு இன்றைய எபிசோட் முடிவடைகிறது.