ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் அமெரிக்க கிளம்புவதாக தெரிய வர அபிராமி அதிர்ச்சி அடைந்தாள்,


இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் அருணாச்சலம் அபிராமியிடம் நீ உன்னுடைய ஆசையை அவன் மேல திணிக்க பார்க்கிற என திட்டுகிறார். பிறகு அபிராமி கார்த்திக்கிடம் நீ அமெரிக்காவுக்கு மொத்தமாக போறியா எப்படி என கேட்க நான் கொஞ்ச நாள் தனியா இருக்கனும், அதனால் தான் போறேன் என்று சொல்கிறான்.


மறுபக்கம் மீனாட்சி போன் செய்து தீபாவிடம் கார்த்திக் அமெரிக்க செல்லும் விஷயத்தை சொல்ல தீபா அதனை நினைத்து கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்க அதை பார்த்த மைதிலி கார்த்திக் கூப்பிடும் போதே அவன் கூட போகாமல், இப்போ அழுது என்ன பிரோயோஜனம், எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க என்று திட்ட ஜானகி அங்கு வந்து மைதிலியை அமைதியாக இருக்க சொல்கிறாள்.


இதை கேட்டு தர்மலிங்கம் அவ சொல்றதுல என்ன தப்பு இருக்கு என்று பேச ஜானகி நடந்த விஷயங்கள் அனைத்தையும் போட்டு உடைக்க அந்த அபிராமி இப்படி இரக்கம் இல்லாதவளா என்று அதிர்ச்சி அடைகின்றனர். இங்கே ஐஸ்வர்யா யோசனையில் இருக்கும் அபிராமியை ஏற்றி விட இது தான் நேரம் என்று கார்த்திக் குறித்து போட்டு கொடுக்க அபிராமி அவன் எதையும் யோசித்து முடிவு செய்றவன் என பதிலடி கொடுக்கிறான்.


அவனுக்குள்ள தீபா மேல இவ்வளவு காதல் இருக்குனு எனக்கு தெரியாமல் போய்டுச்சு, நானே போய் தீபாவை கூட்டிட்டு வரேன் என அபிராமி சொல்ல அதை மீனாட்சி கேட்டு விடுகிறாள், இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்