ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபாவை கடத்திய கவிதா இவர்களிடம் சிக்கினாள்.


இதையடுத்து இன்றைய எபிசோடில் நம்பரை ட்ரேஸ் செய்து கவிதாவை சுற்றி வளைத்து தீபா குறித்து விசாரிக்க ஒருத்தர் பணம் கொடுத்து ஒரு வீட்டின் அருகே கூட்டிட்டு வர சொன்னாரு என்று சொல்ல கார்த்திக் கவிதாவை அழைத்து கொண்டு செல்ல அவள் தீபாவை அடைத்து வைத்த வீட்டை காட்டுகிறாள்.


மறுப்பக்கம் நட்சத்திரா துரையை சந்தித்து நீ தான் தீபாவையும் அபிராமியும் கடத்தி இருக்கேனு எனக்கு தெரியும், அபிராமியை மட்டும் என்கிட்டே ஒப்படைச்சிடு நான் நல்ல பேர் வாங்கிக்கிறேன் என்று சொல்ல துரை மறுப்பு தெரிவிக்கிறான், இதனால் நட்சத்திரா உன்னை பத்தி கார்த்தியிடம் எல்லா விஷயத்தையும் சொல்லிடுவேன் என்று மிரட்டுகிறாள்.


உடனே துரை அப்படினா அபிராமியிடம் உன்னை பத்தி எல்லா விஷயத்தையும் சொல்லிடுவேன் என்று செக்மேட் வைக்க நட்சத்திரா பதில் பேச முடியாமல் அங்கிருந்து கிளம்பி செல்கிறாள். இங்கே கவிதா காட்டிய வீட்டின் வெளியே இருக்கும் கார்த்திக் கதவை தட்ட ரவுடிகள் பயத்துடன் கதவை திறக்க அது துரை என தெரிய வருகிறது. அவன் தீபாவை கடத்திய விஷயம் நட்சத்திராவுக்கு தெரிய வந்து என்கிட்ட வந்து பேசுறா, ஐஸ்வர்யாவுக்கு இங்க இருந்து தான் போன் கால் வந்திருக்கு என்று கோபப்பட ரவுடிகள் அதனால் தான் இடம் மாற்றி விட்டோம் என்று சொல்கின்றனர்.


கார்த்திக் கதவை தட்டியும் திறக்கத்தால் கதவை உடைத்து கொண்டு உள்ளே செல்ல அங்கு யாரும் இல்லாமல் ஏமாற்றம் அடைகிறான், எப்படியாவது அம்மாவையும் தீபாவையும் காப்பாற்றி விட வேண்டும் என்ற யோசனையில் வரும் கார்த்திக் ஒரு இடத்தில் காரை நிறுத்தி வாட்டர் பாட்டில் வாங்கி தண்ணீர் குடிக்கும் போது ஒரு குழந்தை விபத்தில் சிக்க போக கார்த்திக் அந்த குழந்தையை காப்பாற்றுகிறான்.


பிறகு அந்த குழந்தை துரையின் குழந்தை என தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.