தமிழில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சியாக ஜீ தமிழ் திகழ்கிறது. இந்த தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா உருவத்தில் இருக்கும் கீதா, கார்த்திக் கார் மீது வந்து விழ அவளை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்த நிலையில் இன்று நடக்க போவது என்ன ?என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


ஹாஸ்பிடலில் தீபா:


அதாவது, கீதா எஸ்கேப் ஆன நிலையில் போலீஸ் அவளை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று கிளம்புகின்றனர். மறுபக்கம் ஹாஸ்பிடலில் இருக்கும் அபிராமி கண் விழிக்க குடும்பம் மொத்தமும் அவளை பார்க்க உள்ளே வருகிறது. 


கண் விழித்த அபிராமி கார்த்திக் தீபா கல்யாணம் முடிந்ததா? என்று கேட்க அருணாச்சலம் உண்மையை சொல்ல வர டாக்டர் தடுத்து நிறுத்தி விடுகிறார், இந்த சமயத்தில் கார்த்திக் மீனாட்சிக்கு போன் போட்டு தீபா கிடைத்து விட்டதாகவும் சிறு காயங்கள் இருப்பதால் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டு இருப்பதாகவும் சொல்கிறான். 


அடுத்து நடக்கப்போவது என்ன?


அடுத்து பிளாஸ்பேக்கில் கீதா பணக்கார வீட்டு பெண், பெரிய பிசினஸ் மேன் என்பது தெரிய வருகிறது. கார்த்திக் அவளை தான் தீபாவாக நடிக்க அழைத்து வருகிறான் என்பது தெரிய வருகிறது. இதைத் தொடர்ந்து மீனாட்சி ஐஸ்வர்யாவிடம் வந்து எதுக்கு இப்படி பேசிட்டு இருக்க? தீபா திரும்ப வருவது பிடிக்கலையா? என்று கேட்க ஐஸ்வர்யா ஷாக்காகி சமாளிக்கிறாள். 


இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.