தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி சந்திரகலா மற்றும் சிவனாண்டியை பிரித்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

பழி வாங்க துடிப்பது ஏன்?

அதாவது, ராஜராஜன் கார்த்தியிடம் சந்திரகலா கல்லூரி படிக்கும் போது சிவனாண்டியை காதலித்து திருமணம் செய்து கொள்ள, சாமுண்டீஸ்வரி அவன் நல்லவன் இல்லை என்று சொல்லி பிரித்து அழைத்து வந்ததையும் அதனால் சந்திரகலா அக்காவையே பழி வாங்க நினைக்கிறாள் என்று சொல்கிறார். 

சபதம் எடுத்த சந்திரகலா:

இதை கேட்ட கார்த்திக் எல்லாத்தையும் நான் சரி செய்யுறேன் என்று வாக்கு கொடுக்கிறான், பிறகு சந்திரகலாவுக்கு சிவனாண்டி விஷம் குடித்து விட்டதாக போன் கால் வர சந்திரகலா பதறியடித்து ஓடுகிறாள். எதுக்கு இப்படி பண்ணீங்க? என் அக்காவுக்கு கிடைக்குற அத்தனை மரியாதையும் உங்களுக்கு கிடைக்க வைப்பேன், அதுவரைக்கும் நான் ஓய மாட்டேன் என்று சபதம் செய்கிறாள். 

Continues below advertisement

அடுத்த நாள் கார்த்திக் மற்றும் மயில்வாகனம் ஆகியோர் ஹோட்டல் கடை திறப்பது குறித்து சாமியாரிடம் பேசி கொண்டிருக்க சிவனாண்டி இதை ஒட்டு கேட்டு விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.