ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் செந்திலை கத்தியால் குத்த மாயா காப்பாறுவது போல கத்தி குத்து வாங்க பிளான் போட்டிருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது, செந்தில் வீட்டில் இருந்து கிளம்ப, பழனி தனது ஆட்களுக்கு போன் செய்து செந்திலை கத்தியை வச்சு குத்தும்படி சொல்ல, அடியாட்களில் ஒருவன் ஒரிஜினல் கத்தியை  மாற்றி வைத்து விடுகிறான். மாயா பார்த்துக் கொண்டிருக்க ரவுடிகள் செந்திலை குத்த போக மாயா டம்மி  கத்தி என நினைத்து செந்தில் முன்னால் வந்து நிற்க, மாயா கத்தி குத்து வாங்கி சாய ஊர்க்காரர்கள் அனைவரும் பார்க்க செந்தில் அவளை ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பிட்டலில் சேர்கிறான்.


இதனை தொடர்ந்து அன்னலட்சுமி அமுதாவிடம் எதுக்கு அவளை கொண்டு போய் ஆஸ்பிட்டல்ல சேர்த்தான், ஊரெல்லாம் புருஷனை காப்பாத்துறதுக்காக பொண்டாட்டி கத்தி குத்து வாங்கிருக்கான்னு அவளை பெருமையா வேற பேசுறாங்க என சொல்லிக்  கொண்டிருக்கும் போது மாயாவை அழைத்தபடி செந்தில் வர அன்னலட்சுமி செந்திலை திட்டுகிறாள். அமுதா யாரா இருந்தாலும் உசிரை காப்பாத்துறது நல்ல விஷயம் தான என சமாதானப்படுத்துகிறாள்.


இதனை தொடர்ந்து உமா மாயாவிடம் டிராமா எல்லாம் ஓகே வா என கேக்க, மாயா ஒரு டம்மி கத்தியால டிராமா பண்ண சொன்னா, ஒரிஜினல் கத்தியால என்னை கொல்லப்  பார்க்குறீங்களா என கோபமாக பேச உமா அவளிடம் இப்ப ஊரே உன்னை  பத்தி தானே பேசுது அதுக்கு சேதாரம் கொஞ்சம் அதிகமாயிடுச்சு அவ்வளவு தான் என்று சொல்கிறாள்.


அமுதாவுவையும் செந்திலையும் சேர்ந்து நிக்க சொல்லி, அன்னமும் மாணிக்கமும் வாழ்த்துக்கள் சொல்ல, இருவரும் முழித்தபடி நிற்க, இன்னைக்கு உங்களுக்கு 5வது கல்யாண நாள் என சொல்ல, அமுதா, செந்தில் இருவரும் சந்தோஷப்பட உமா அதை கவனித்துகொண்டிருக்கிறாள். பிறகு மாயா ரூமில் தூங்கிக் கொண்டிருக்க, உமா அவளை எழுப்பி வெளியே கூட்டி வர அன்னலட்சுமி செந்திலுக்கும், அமுதாவுக்கும் புது டிரஸ் கொடுக்க மாயாவும் உமாவும் கடுப்பாக பார்க்கின்றனர்.


அடுத்து அமுதாவும் செந்திலும் புது டிரஸ் போட்டுக் கொண்டு வந்து அன்னலட்சுமியிடம் ஆசிர்வாதம் வாங்க அன்னலட்சுமி சந்தோஷமா சினிமாவுக்கு எல்லாம் போயிட்டு வாங்க, சாயந்திரம் கேக் எல்லாம் வெட்டி கொண்டாடுறோம் என சொல்ல, மாயா கோபத்துடன் பார்க்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலக்ஷ்மியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.