ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.


பாட்டி வேதநாயகி வைத்த கோலப்போட்டி மற்றும் சமையல் போட்டியில் அமுதா ஜெயித்து காட்டிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது பாட்டி வெற்றியாளர் யார் என்பதை நீங்கள் தான் தேர்வு செய்ய போகிறீர்கள் என்று ஒட்டு போட சொல்ல அனைவரும் தங்கள் ஒட்டு யாருக்கு என்று ஒரு பேப்பரில் எழுதி அந்த பெட்டியில் போடுகின்றனர். வடிவேல் எப்படி இருந்தாலும் நாம தான் ஜெயிக்கணும் என்று நினைத்து கொண்டிருக்கிறான்.


அடுத்ததாக பாட்டி  அனைத்து ஓட்டுக்களையும்எண்ண எல்லாரும் அன்னத்துக்கு தான் போட்டு இருக்கின்றனர் என்பது தெரிய வருகிறது. இதைக் கேட்டு அன்னம்  ஷாக் ஆகிறாள்.உடனே பாட்டி அன்னமிடம் இந்த வீட்டில் யாரும் நீ தோத்துப் போகணும்னு நினைக்கல உன்னோட மருமக உட்பட உனக்குத்தான் ஓட்டு போட்டு இருக்கா, இப்ப சொல்லு ஜெயிச்சது யாருன்னு என்று கேட்க அன்னம் எதுவும் பேசாமல் அமைதியாக செல்ல அத்தை அமுதாவிடம் அவ தோல்வியை ஒத்துக்கிட்டா அதனால் நீ நாளிலிருந்து பள்ளிக்கூடத்துக்கு போ என்று சொல்ல அமுதா சந்தோசப்படுகிறாள்.


மேலும் அமுதா ஸ்கூல் யூனிபார்மை பார்த்து சந்தோஷப்பட செந்தில் அவளுக்கு வாழ்த்து சொல்ல எங்க அம்மாவே அப்பத்தாவை பார்த்து பயப்படுவாங்க, நீ அப்பத்தா கிட்ட நல்ல பேரு வாங்கிட்ட என்று சொல்ல அமுதா அவனிடம் அக்கறை இல்லாதவங்க எல்லாம் என்னை பாராட்ட வேண்டாம் என்று சொல்கிறாள். இதனை தொடர்ந்து அமுதா மறுநாள் காலையில் சீக்கிரம் எழுந்து கொள்ள அலாரம் வைக்க வடிவேலும் பரமுவும் செம்பு தண்ணீரில் தூக்க மாத்திரையை கலக்க அமுதா தண்ணீரை குடித்து விட்டு தூங்குகிறாள். காலையில் அலாரம் அடித்தும் அமுதா தூங்கியபடி இருக்கிறாள்.


நீண்ட நேரம் கழித்து அமுதா காலையில் பதறி எழுந்து கலங்கிப் போய் கிச்சனுக்குள் நுழைய, கிச்சனில் அனைத்தும் ரெடியாக இருக்க அமுதா ஆச்சரியமடைகிறாள். மாணிக்கம் அமுதாவிடம் கலக்கிட்டம்மா என சொல்ல, வடிவேலு, பரமு பதட்டம் அடைய அமுதா செந்திலை பார்க்க , அவன் கையில் கரி ஒட்டி இருப்பதை கவனிக்கிறாள்.


பிறகு அமுதா கிளம்பி பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்குகிறாள். அதோடு அமுதா பேனாவை கீழே போட்டு எடுப்பது போல அன்னலட்சுமி காலை தொட்டுகும்பிட்டு ஆசிர்வாதம் வாங்குகிறாள். பள்ளிக் கூடத்தில் உமா எப்படியும் இங்க தான வரனும் பார்த்துக்கலாம் என மனதிற்குள் நினைத்து கொண்டிருக்கிறாள்.