சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) சீரியலின் நாளைய எபிசோடுக்கான ப்ரொமோ வெளியாகி உள்ளது. அதில், பாட்டி ஆண்களையெல்லாம் ஒருபுறமாகவும் பெண்களை எல்லாம் மற்றொறுபுறமாகவும் நிற்கச் சொல்கிறார். அவர்கள் கண்களை கட்டிக்கொண்டு உறியடிக்க தயார் நிலையில் இருக்கின்றனர். ”ஜெயிக்கப்போறது அண்ணாமலை அணியா, இல்லை விஜயா அணியா என்று பார்க்கலாம்” என்கிறார் பாட்டி.


முதலில் மனோஜ், ரோகினி, ஸ்ருதி உள்ளிட்டோர் உறி அடிக்கின்றனர். ஸ்ருதி உறியடிக்கும்போது மீனா அவரை தூக்கி விடுகிறார். முத்து மீனாவை தடுத்து விட்டு, “அதெல்லாம் கிடையாது, என்ன பாட்டி இது போங்காட்டமா இருக்குது” என சொல்லுகிறார். இவர்கள் மூவராலும் உறியை அடிக்க முடியவில்லை. 


பின்பு மீனா உறியடிக்கிறார். அவர் தெரியாமல் கம்பால் மனோஜின் தலையில் அடித்து விடுகிறார். பாட்டி, “ஏய் முத்து எறங்கி அடி” என சொல்லுகிறார். முத்து உறியை சரியாக அடித்து விடுகிறார்.  முத்துவின் நண்பர்கள் முத்துவை தூக்கிக் கொண்டாடுகின்றனர். மீனா சந்தோஷமாக முத்துவை பார்க்கிறார். பாட்டி அண்ணாமலை கைத்தட்டி சிறிக்கின்றனர். இத்துடன் ப்ரமோ நிறைவடைகிறது. 


சிறகடிக்க ஆசை சீரியல் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதுடன், கடந்த சில நாட்களாக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ரோகினியின் மாமாவாக ப்ரெளன் மணி கலக்கி கொண்டிருக்கிறார். கதை கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் நகர்ந்து கொண்டிருக்கிறது. விஜயா ரோகினியைப் பற்றிய உண்மை தெரியாமல் அவரை கொண்டாடி கொண்டிருக்கிறார். ரோகினியும் ஒரு கரிக்கடைக்காரரை தன் மாமாவாக நடிக்க வைத்து தன் குடும்பத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். 


இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ப்ரெளன் மணி மனோஜிக்கு வலுக்கட்டாயமாக சரக்கை ஊற்றி விட்டார். இதனால் மனோஜ் போதையில் எதுவும் பேசாமல் வீட்டில் சிலை போன்று அமர்ந்திருக்கிறார். ரோகினியும், விஜயாவும் மானோஜ் உனக்கு என்னாச்சி என கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் மனோஜ் பதில் ஏதும் கூறாமல் விஜயாவை சிலைப்போல் பார்த்துக் கொண்டே இருந்தார். இது வீட்டில் ஒரு பிரச்னையாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ப்ரெளன் மணி போதையில் ஏதாவது உண்மையை உளருவார் என முத்து எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், அவர் எதையும் சொல்லவில்லை. மேலும் ப்ரெளன் மணி இங்கு இருக்கும் வரை மேலும் பல அலப்பறைகள் செய்வார் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது. 


மேலும் படிக்க 


Neeya Naana:“குடும்பத்தினரால் கணவரை பிரிந்தேன்.. ஆனால் இன்னைக்கு” - நீயா நானாவில் கலங்கிய பெண்!


S.A. Chandrasekhar: இது எப்படி? பெரிய நடிகரை வச்சி படம் எடுத்தா பெரிய இயக்குநரா? - லோகேஷை கிழித்தாரா விஜய் அப்பா?