விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.


மீனாவின் அம்மா மாப்பிள்ளை வரலையா என கேட்கிறார். அதற்கு மீனா ”அவரு சவாரிக்கு ரொம்ப தூரம் போய்ட்டாரம்”என்று கூறுகிறார். மீனா வீட்டிற்கு சென்று அண்ணாமலையிடம், தம்பிக்கு அடிப்பட்டதை சொல்கிறார். அப்போது விஜயா ”அவன் கிட்டதான் பைக் இல்லையே” என கேட்கிறார். மீனா ஃப்ரண்ட் பைக் என சொல்லுகிறார். அதற்கு மனோஜ்  ”ஃப்ரண்ட் பைக்கா இல்ல திருடுன பைக்கா?” என கேட்கிறார்.


அப்போது முத்து உள்ளே இருந்து வருகிறார். மீனா தம்பியை பார்க்க ஹாஸ்பிட்டலுக்கு ஏன் வரல என கேட்கிறார். அண்ணாமலையும் இதே கேள்வியை கேட்கிறார். அதற்கு முத்து “ அப்பா அவன் என்ன போருக்கு போயாப்பா கைய உடைச்சிக்கிட்டான். அவன் என்ன வேலை பார்க்குறான்னு உங்களுக்கு தெரியுமா?” என கேபமாக பேசுகிறார். ”அவன் பார்ட் டைம்ல  டேட்டா எண்ட்ரி வேலைக்குப் போறான்” என்று கூறுகிறார் மீனா. ”எதாவது ஒரு பேரை சொல்லிக்க வேண்டியது என்ன வேலை பன்றானு போய் பார்த்தா தானே தெரியும்” என்கிறார் முத்து. 


ரோகினி விஜயாவிடம், ”ஆண்டி அவங்க சண்டை போட்டுக்குற மாதிரி தெரியுது” என்கிறார். ”மாதிரி எல்லாம் இல்லமா சண்டையே தான். இது எப்போ நடக்குன்னுதான் நானும் பார்த்துக்கிட்டே இருந்தேன்” என்கிறார் விஜயா. ”இதெல்லாம் தப்பு நீ அவனை போய் பாரு. நாளைக்கு காலையில முதல் வேலையா போய் சத்யாவ பாரு” என்கிறார் அண்ணாமலை. 


முத்து மருத்துவமனைக்கு செல்கிறார். ”நீ என்னென்ன திருட்டு வேலை பார்க்குறேனு எனக்கு தெரியும் டா”  நீ என்னன்ன தப்ப மறச்சிட்டு இருக்கனு எனக்கு தெரியும்” என்கிறார் முத்து. நான் என்ன பண்னேனு சத்யா கேட்கிறார். உடனே முத்து, விஜயாவிடம் இருந்து சத்யா வழிப்பறி செய்த வீடியோவை காண்பிக்கிறார். கண்ட கண்ட திருட்டு நாய்ங்களோட சேர்ந்து திருட்டு வேலை பார்த்துக்கிட்டு இருக்க என்கிறார் முத்து. 


”இந்த உலகத்துல எல்லோரும் யார்க்கிட்ட இருந்தாவது எதையாவது திருடிக்கிட்டே தான் இருக்காங்க. ஏன் உங்க வீட்ல இருக்க மத்த மருமகளுங்கள உங்க அம்மா எப்டி நடத்துறாங்க. என் அக்கா வந்து ஏழை அதனால தானே அசிங்கப்படுத்துறாங்க. நீங்க ட்ரைவர் தானே.  அந்த வேலை செஞ்சி சம்பாதிச்சு பெரிய ஆளா ஆகிட முடியுமா?”  என டயலாக் பேசுகிறார் சத்யா. ”இந்த விஷயம் உங்க வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்” என்கிறார் முத்து. ”போய் சொல்லுங்க” என்று கேஷூவலாக சொல்கிறார் சத்யா. 


”முதல்ல இந்த மாதிரி அட்வைஸ் பண்றத நிறுத்துங்க. பெரிய மல்டி மில்லியர்னு நினைப்பு. உங்கள மாதிரி ஒரு ஆளை கல்யாணம் பண்ணிக்கிடு எங்க அக்கா தான் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கா ”என்கிறார். மேலும் சத்யா முத்துவை கேவலமாக பேசிக்கொண்டு இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.