தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் வில்லிகளின் சதியை வீழ்த்தி கச்சேரி நடத்த ஏற்பட்ட தடையை உடைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது கார்த்திக் ஆபிசில் இருக்கும் போது ரூபஸ்ரீ மற்றும் கோகிலா என இருவரும் உள்ளே வருகின்றனர். இவர்கள் வருவதை சிசிடிவி கேமராவில் பார்த்து விடும் கார்த்திக் அவர்களை உள்ளே விட சொல்கிறான், பிறகு உள்ளே வந்த இவர்கள் அப்படியே நல்லவர்கள் போல பேசி நடிக்கின்றனர். 


கார்த்திக் நீங்க தான் கச்சேரியை நடக்க விட கூடாதுனு பிளான் போட்டது என்று கேட்க நாங்க எதுக்கு அப்படி பண்ணனும் நாங்க இல்ல என்று சமாளிக்கின்றனர். பிறகு சரி தர்மலிங்கம் வீட்டிற்கு போய் ஏன் பணத்தை கேட்டீங்க என்று கேட்க அவங்க கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டோம். கொடுத்துட்டாங்க என்று சொல்லி சமாளிக்கின்றனர். 


பிறகு ரூபாஸ்ரீ இங்கும் அங்கும் சுத்தி பாத்து விட்டு பாத்ரூம் எங்கே என்று கேட்டு உள்ளே சென்று கையில் எடுத்து வந்திருந்த பணப்பையை வைத்து வெளியே வந்து இன்கம் டேக்ஸ் டிபார்ட்மென்ட்டிற்கு தகவல் கொடுக்கின்றனர். அவர்கள் சோதனையிட கார்த்திக் ஆபிஸ்க்கு வருகின்றனர். வெளியே போன கோகிலா மற்றும் ரூபாஸ்ரீ மீண்டும் உள்ளே வருகின்றனர். 


ஆபிஸ் முழுவதும் பணத்தை தேட எங்கும் எதுவும் கிடைக்காத நிலையில் இவர்கள் பாத்ரூமில் தேடி பார்க்க சொல்ல பிறகு அங்கும் தேடி பார்க்கின்றனர், பிறகு நீங்க இங்க எல்லாம் வர கூடாது என்று ரூபாஸ்ரீ மற்றும் கோகிலாவை வெளியே துரத்தி விடுகின்றனர். எங்கும் பணம் கிடைக்கவில்லை தவறான தகவல் வந்ததாக சொல்லி வெளியே கிளம்புகின்றனர். 


பிறகு கார்த்திக் கோகிலா வீட்டிற்கு வந்து ஒரு கவரை கொடுத்து உங்க பணத்தை உங்க அக்கவுண்ட்லயே போட்டுட்டோம் என்று ஷாக் கொடுக்கிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்டைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 


மேலும் படிக்க 


Valentine's Day: பள்ளியில் மட்டும் 3 காதல்கள்.. சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு இப்படி ஒரு நிலையா?


Valentine's Day: காதலர் தினத்தில் சிங்கிளாக புகைப்படம் பதிவிட்ட பிரபலங்கள் - என்ன சொன்னாங்க தெரியுமா?