ரோகினி வேலை செய்யும் பார்லருக்கு, அதன் ஓனர் செல்கிறார். அவர் முத்துவின் காரில் வந்த நிலையில் பணம் கொடுக்க மறந்து போன் பேசிக்கொண்டே பார்லருக்குள் சென்று விடுகிறார். முத்து காசு வாங்குவதற்காக உள்ளே செல்கிறார். "மேடம் காசு கொடுக்கவே இல்லை" என்கிறார். நான் என் கார்ல வந்த நியாபகத்துல வந்துட்டேன் என்கிறார் ஓனர். பின்னர் அங்கிருக்கும் ஸ்டாஃபிடம் அவருக்கு காசு கொடுத்துடுமா என சொல்லிவிட்டு செல்கிறார் ஓனர்.  ”என்னடா இது இவங்க இந்த கடைக்கு முடி வெட்ட வந்துட்டு கடைக்காரங்கள காசு கொடுக்க சொல்லிட்டு போறாங்க” என்கிறார் முத்து. அதற்கு அங்கிருக்கும் ஸ்டாஃப் அவங்க தான் சார் ஓனர் என்கிறார். 


முத்து - அண்ணாமலை:


இது விஜயா பியூட்டி பார்லர் தானே என கேட்கிறார் முத்து. இப்போ கடை கைமாறிடுச்சி என சொல்கிறார் அந்த ஸ்டாஃப். ”அப்போ  ரோகினி?” என முத்து கேட்கிறார். அவங்களும் இப்போ எங்கள மாதிரி ஒரு ஸ்டாஃப் தான் சார் என்கிறார் அந்த ஸ்டாஃப்.  க்ரீன் ப்ராண்ட் என்ற பெயரில் கடை உள்ள நிலையில் அதை முத்து செல்போனில் வீடியோ எடுத்துக் கொள்கிறார். பின் வீட்டிற்கு சென்று அவர் அப்பாவை தனியே கூட்டிச் சென்று அண்ணாமலையின் காதில் ரகசியமாக ரோகினியின் கடை கைமாறிய விஷயத்தை சொல்கிறார். நிஜமாவா சொல்ட்ற என அண்ணாமலை கேட்கிறார். உடனே முத்து தான் எடுத்த வீடியோவை அண்ணாமலையிடம் காட்டுகிறார். 


பின் அன்னைக்கு மாதிரி எல்லோரையும் கூப்டு கலாய்ச்சி விட்டுடலாம்னு தான் நினச்சேன் நீங்க தான் எல்லோர் முன்னாடியும் சொல்லக்கூடாதுனு சொல்லி இருக்கிங்க அதான் இப்டி பன்றேன் என்கிறார் முத்து. இதை அம்மா கிட்ட சொல்லலாம் என கூறி முத்து எழுந்து செல்கிறார். சொல்ல வேண்டாம் என அண்ணாமலை தடுத்து விடுகிறார். ”ஒருவேளை விஜயாவுக்கு இது ஏற்கனவே தெரிஞ்சி இருக்கலாம். உண்மை ஒருநாள் வெளிச்சத்துக்கு வரும்” என சொல்கிறார் அண்ணாமலை. மேலும் ”என்கிட்ட சொன்ன மாதிரி வேற யார்க்கிட்டயும் சொல்லிடாத” என அண்ணாமலை சொல்கிறார். 


வெறுப்பேற்றும் முத்து:


அபோது ரோகினி வீட்டிற்குள் வருகிறார். விஜயாவிடம் இன்னைக்கு பார்லரில் வேலை அதிகம் என சொல்கிறார். அதற்கு விஜயா ’நான் வேணும்னா அந்த கல்லாவுல வந்து உட்கார்ந்துக்குறேன்” என்கிறார். இதை கேட்டு முத்து நக்கலாக இரும்புகிறார். ”உங்க பேர்ல இருக்குறது எங்க கடை மட்டும் தான்” என்கிறார் முத்து. அப்போது அண்ணாமலை சொல்ல வேண்டாம் என்பது போல், முத்துவின் கையை பிடித்துக் கொள்கிறார். பின் விஜயாவை முத்து வெறுப்பேற்றுகிறார். 


இஸ்திரி கடை போடச் செல்லி மனோஜிக்கு முத்து ஐடியா கொடுக்கிறார். இதனால் ரோகினியும், விஜயாவும் கடுப்பாகின்றனர். இதனையடுத்து மனோஜ் சாப்பாடு வேண்டாம் என கூறிவிட்டு வருத்தமாக சென்று விடுகிறார்.  இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.