சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal ) தொடரின் நேற்றைய (பிப்ரவரி 1) எபிசோடில் தர்ஷினியை தேடி ஈஸ்வரி, ஜனனி, நந்தினி மற்றும் ரேணுகா செல்ல ஒரு இடத்தில் உட்கார்ந்து ஓய்வு எடுக்கிறார்கள். அப்போது அங்கே வந்த சிலர் அவர்களிடம் தப்பாக நடக்க முயற்சி செய்ய அவர்களை முடிந்த வரையில் அடித்து தங்களை காப்பாற்றிக் கொள்கிறார்கள் பெண்கள். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று இதை பார்த்துவிட்டு வந்து நிற்க அதில் இருந்து ஒருவர் இறங்குகிறார். அவர்தான் ஜீவானந்தம். ஜீவானந்தம் துப்பாக்கியை எடுத்து வந்து அந்த ஆட்களை விரட்டி விடுகிறார். மறுபக்கம் தர்ஷினி அந்த ரவுடிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக தனக்கு வயிறு வலிக்கிறது என சொல்லி பேப்பரில் மருந்தை எழுதி தருகிறேன் என சொல்லி அவளை கடத்தி வைத்திருப்பது பற்றி தகவல் எழுதித்தருகிறாள். இங்கிலீஷ் படிக்க தெரியாத அந்த ரவுடி மற்ற அடியாட்களிடம் தர்ஷினியை பார்த்து கொள்ள சொல்லி மருந்தை வாங்கி வருவதற்காக செல்கிறான்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. மருமகள்களை பற்றி மோசமாக பேச, ஞானம் அழுதுகொண்டே "பெத்த பொண்ணையே ஒளிச்சு வச்சுட்டு இப்படி ரா பகலா தேடிகிட்டு இருப்பாங்களா அம்மா அவங்க" என சொல்ல விசாலாட்சி அம்மா கண்கலங்குகிறார்.
வீட்டில் கதிர், ஞானம் மற்றும் தர்ஷன் எங்கோ கிளம்ப தாரா ஓடி வந்து "பெரியப்பா இவ்வளவு மோசமா பேசுனதுக்கு அப்புறம் நாம ஏன் அவரோட சாப்பாடு சாப்பிடணும்?" என கேள்வி கேட்டு செல்கிறாள். அதை கேட்டு ஞானமும் கதிரும் புரியாமல் பார்க்கிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal ) எபிசோடுக்கான ஹிண்ட்.