விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் இறந்து போனதாக சொல்லப்பட்ட அமிர்தாவின் முதல் கணவன் கணேஷ் உயிருடன் நினைவு நாள் அன்று திரும்ப வந்து அவனின் அப்பா அம்மாவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறான். வீட்டுக்கு வந்த கணேஷ் அமிர்தாவை வீடு முழுக்க தேடுகிறான். அங்கே எழில் நிலாவுடன் அமிர்தா இருந்த புகைப்படத்தை எடுத்து மறைத்து வைக்கிறார் கணேஷின் அப்பா.


ரூமிலும் அமிர்தா இல்லாததால் அப்பா அம்மாவிடம் அமிர்தா எங்கே என கேட்கிறான். அமிர்தா அவளுடைய அம்மா வீட்டுக்கு சென்று இருப்பதாக சொல்லி சமாளிக்கிறார். அமிர்தாவுக்கு போன் செய்து நான் உயிருடன் வந்து இருப்பதை பற்றி சொல்லுங்கள். நான் வந்து இருப்பது தெரிந்தால் மிகவும் சந்தோஷப்படுவாள்.அவளை நான் உடனே பார்க்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது. சீக்கிரம் வரச்சொல்லுங்கள் என சொல்கிறான். சரிப்பா சொல்றேன் என சொல்லி அழைத்து செல்கிறார் கணேஷின் அப்பா.


 



மறுபக்கம் பாக்கியா ஜெனிக்கு போன் செய்து நலம் விசாரிக்கிறாள். செழியனை பற்றியும் கேட்கிறாள். செழியன் அங்கு வரவும் இல்லை போனும் செய்யவில்லை என ஜெனி சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறாள். அவளுக்கு செழியன் மீது சந்தேகமும் வருகிறது.


கணேஷுக்கு அவனுடைய அம்மா அழுது கொண்டே சாப்பாடு ஊட்டுகிறார். "அழாதீங்க அம்மா நான் தான் வந்துட்டேன் இல்ல. நான் உங்களை பத்திரமா பார்த்து கொள்கிறேன்" என சொல்லி சமாதானம் செய்கிறான் அப்பாவிடம் "அமிர்தாவுக்கு நான் வந்தது பற்றி சொல்லியாச்சா. அவ எப்ப வரேன்னு சொன்னா" என கேட்கிறான். "அமிர்தா குடும்பத்தோட கோயிலுக்காக சென்னைக்கு போய் இருக்காங்களாம்" என சொல்லி தற்சமயம் சமாளிக்கிறார். "எப்போ திரும்பி வருவார்களாம். நான் வந்துட்டேன்னு சொன்னீங்களா?" என கணேஷ் கேட்க "இல்ல பா எங்களாலேயே நீ திரும்பி வந்ததை நம்ப முடியல, இப்போவே அவகிட்ட சொன்னா அவ பதட்ட படுவா அதனால இப்போ சொல்லல" என்கிறார் கணேஷின் அப்பா. "பரவாயில்ல அப்பா மூணு வருஷமா காத்துகிட்டு இருந்தேன். மூணு நாள் தானே பரவாயில்லை" என சொல்லிவிட்டு ரூமுக்கு சென்று விடுகிறான் கணேஷ். 


அங்கே அமிர்தா கணேஷை நினைத்து கவலை பட ராமமூர்த்தி வந்து அவளை சமாதானப்படுத்துகிறார். அப்பா அம்மாவுக்கு போன்  பேச சொல்கிறார். அம்மாவுக்கு போன் செய்த அமிர்தா ஒன்னும் பேசாமல் அமைதியாக இருக்க ராமமூர்த்தி அமிர்தாவிடம் இருந்து போனை வாங்கி "நீங்க கவலை படாதீங்க. எழிலை உங்களுடைய மகன் போல நினைச்சுக்கோங்க" என அறிதல் சொல்கிறார். 


 



மாலினி வீட்டில் செழியன் இருக்கிறான். அப்போது செழியனுக்கு ஜெனி போன் செய்து "மம்மி உன்ன கேட்டுகிட்டே இருக்காங்க. நீ எப்போ வீட்டுக்கு வர. குழந்தை பிறந்ததுக்கு அப்பறமும் நீ இப்படியே இருந்தீனா நான் உன்னை டைவர்ஸ் பண்ணிடுவேன். ஆன்ட்டி உனக்கு போன் பண்ணா நீ எடுக்கவே இல்லயாம். அவங்களுக்கு போன் பண்ணி பேசு" என சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறாள் ஜெனி.


இனியாவின் அசைன்மென்ட்டுக்காக பாக்கியா, இனியா, செல்வி, ஈஸ்வரி என அனைவரும் காட்டுக்கு சென்றுள்ளனர். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.