விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது பாக்கியா பாண்டிச்சேரியில் ஒரு திருமணத்தில் சமைக்கும் ஆர்டர் கிடைத்ததால் அங்கு மிகவும் அருமையாக சமைத்து அனைவரின் பாராட்டுகளையும் குவித்து வருகிறாள். அதே திருமணத்திற்கு விருந்தினர்களாக வந்துள்ளார்கள் கோபி மற்றும் ராதிகா. பாக்கியாவை அனைவரும் பாராட்டுவதை பார்த்து உள்ளுக்குள் புகைந்து கொண்டு இருக்கிறார்கள்.


மேலும் கோபிக்கு, பாக்கியாவும் பழனிசாமியும் பேசிக்கொள்வதை பார்த்தாலே கோபமாக வருகிறது. அந்த வகையில் நேற்றைய எபிசோடில் மலேசியாவில் இருந்து வரும் விருந்தினர்களுக்கு மலேசியன் உணவை செஃப் பாக்கியாவையே சமைக்க சொல்லுங்கள் என கூறி கோர்த்து விட்டு பாக்கியா அசிங்க பட போவதை பார்க்க ஆவலாக காத்திருக்கிறார் கோபி. அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 


 



இன்றைய எபிசோடில் அம்மாவை பார்க்க வந்த எழில் வீட்டுக்கு கிளம்புகிறான். எழில் கிளம்பிய பிறகு அங்கு வந்த சுதாகரின் மனைவி பாக்கியாவிடம், மலேசியாவிலிருந்து வரும் விருந்தினர்களுக்காக மலேசியன் ஃபுட் சமைக்க வேண்டும். அதற்கான லிஸ்ட் இதோ என கூறி கொடுக்கிறார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாக்கியா வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. இதை சமைக்க முடியும் இல்லையா என சுதாகரின் மனைவி கேட்க அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை என சொல்லி அவரை அனுப்பி வைக்கிறாள் பாக்கியா. 


இது வரையில் இந்த லிஸ்டில் இருக்கும் ஐட்டம் பற்றி எல்லாம் நான் கேள்விப்பட்டதே இல்லையே என்ன செய்றது என தெரியவில்லையே என புலம்ப அங்கே பழனிச்சாமி வருகிறார். "இந்த பிரச்சனை பெருசா பாக்காதீங்க நான் வேணுனா சுதாகர் கிட்ட போய் பேசி பார்கவா" என சொல்ல "அதெல்லாம் வேண்டாம் சார் நான் பார்த்துக்குறேன்" என பாக்கியா கூறுகிறாள். உங்களால் நிச்சயம் முடியும் என பழனிச்சாமி ஊக்கப்படுத்துகிறார்.


பாக்கியா இரவெல்லாம் அந்த டிஷ்க்களை சமைத்து பார்க்கிறாள். செல்வி என்ன செஞ்சுட்டியா என கேட்க. கொஞ்சமா செய்து இருக்கேன் செல்வி. இப்போ இது சரியாய் இருக்கான்னு கூட பார்க்க தெரியல என சொல்கிறாள்.அடுத்த நாள் காலை பாக்கியாவை, கோபி  தடுத்து நிறுத்தி மலேசியன் ஃபுட் ரெசிபி லிஸ்ட் வந்ததா? நான் கொடுத்த ஐடியா தான் அது. உனக்கு நான் வைச்ச ஆப்பு. எல்லாம் முன்னாடியும் அசிங்கப்பட்டு நிக்க போற என நக்கலாக பேச விட்டு செல்கிறான்.  


அதற்கு பிறகு அனைவருக்கும் உணவு பரிமாறப்படுகிறது. ஆனால் மலேசியாவில் இருந்து வந்தவர்களுக்கு மட்டும் உணவு பரிமாறப்படவில்லை. பிறகு பாக்கியா அவர்களுக்கு உணவு பரிமாறுகிறாள். அந்த ரெசிபிகள் அனைத்தும் அசத்தலாக இருக்க பாக்கியாவை மேடைக்கு கூப்பிட்டு பாராட்டுகிறார்கள். பழனிசாமியும் பாக்கியாவும் சேர்ந்து போட்டோ எடுத்து கொள்கிறார்கள். அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் கோபி. அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வருகிறது.