விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9வது சீசனில் டைட்டில் வென்ற அருணா பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது. 


சூப்பர் சிங்கர்:


பொதுவாக பெரிய திரையை விட சின்னத்திரைக்கு இருக்கும் ரசிகர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகம். ஒவ்வொரு சேனல்களும் பார்வையாளர்களை தக்க வைப்பதற்காக பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் சீரியல்கள் புது புது படங்கள் கிளாசிக் படங்கள் வெரைட்டியான பல சேனல்கள் என தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. சேனல்களில் ஒரு சில நிகழ்ச்சிகள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவை எப்படி பார்வையாளர்களுக்கு வித்தியாசமான உணர்வை தருகிறது என்பதில்தான் அந்த நிகழ்ச்சியின் வெற்றி அடங்கியுள்ளது. 


அதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பலவும் மற்ற சேனல்களின் நிகழ்ச்சிகளுக்கு முன்னோடி என சொல்லலாம். அந்த அளவுக்கு மற்ற சேனல்களின் ரியாலிட்டி ஷோக்களின் பார்வையாளர்களை விட விஜய் டிவிக்கு அதிகமானோர் உள்ளனர். குறிப்பாக நல்ல குரல் வளம் கொண்ட பாடகர் பாடகி களை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஏகோபித்த வரவேற்பு உள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த எட்டு சீசர்களாக மிகவும் வெற்றிகரமாக நடந்து வந்த நிலையில் தற்போது ஒன்பதாவது சீசன் கடந்த சில வாரங்களாகவே ஒளிபரப்பாகி வந்தது.






இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டைட்டில் வின்னரை தேர்வு செய்தார்.


60 லட்சம் மதிப்பிலான வீடு:


பல கட்டங்களாக நடந்த போட்டிகளின் முடிவில் அருணா,அபிஜித்,பூஜா,பிரசன்னா, பிரியா என ஐந்து பேரும் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் யார் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது என்று எதிர்பார்ப்பு எழுந்தது. பல சுற்றுகளாக நடந்த இறுதிப் போட்டியில் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த இறுதியில் அருணா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9வது சீசனின் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். 


அவருக்கு ரூபாய் 60 லட்சம் மதிப்பிலான வீடு ஒன்றை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வழியாக பரிசாக வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அருணா விரைவில் சினிமாவில் பாட வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அருணா பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 


என்ன சாதி?


அதில், “தான் கோவில்களில் பாட செல்லும்போதெல்லாம், பாடி முடித்த பின் ஒருத்தர், இரண்டு பேர் என்னிடம் கேட்கும் முதல் கேள்வியே நீங்கள் என்ன ஜாதி என்று? தான். அதை வெளியே சொன்னால் அடுத்தது நம்மை பாட விட மாட்டார்களோ என்ற பயம் எனக்குள் இருக்கும். அதனால் வெளியே சொல்லாமல் தவித்து பயந்து பயந்து ஒளிந்து வந்த கதை எல்லாம் நடந்து இருக்கிறது. ஆனால் இனி எந்த மூலைக்கும் சென்று பாடுவேன்,  எனக்கு பயம் கிடையாது” என அருணா கூறியுள்ளார்.