Ethirneechal : ஜீவானந்தத்தை அவமானப்படுத்தும் குணசேகரன்: உண்மையை உடைத்த ஜனனி: எதிர்நீச்சலில் தொடரும் பரபரப்பு!

Ethirneechal: போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த குணசேகரன் ஜீவானந்தத்தை அவமானப்படுத்தி பேச ஈஸ்வரியும் ஜனனியும் ஆவேசப்படுகிறார்கள். அதைப் பார்த்த குணசேகரன் மேலும் அதிர்ச்சி அடைகிறார்.

Continues below advertisement

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (பிப்ரவரி 7) எபிசோடில் ஆதிரை குணசேகரனை எதிர்த்து மற்ற அண்ணன்களுக்காக சண்டை போடுகிறாள். “அவர்கள் ஏன் இந்த வீட்டை விட்டு போக வேண்டும், அவர்கள் இந்த வீட்டுக்குக்காகவும் பிசினஸ்காகவும் நிறைய உழைத்துள்ளார்கள். அவர்களுக்கும் இந்த வீட்டில் இருக்க உரிமை உள்ளது” எனப் பேச குணசேகரன் அவளை அடிக்க கை ஓங்குகிறார். அதை கதிர் தடுத்து விடுகிறான். மனம் நொந்து போன குணசேகரன் இந்த உறவு ஒட்டாது என சொல்லி விட்டு சென்று விடுகிறார்.

போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் ஜீவானந்தம், இன்ஸ்பெக்டரிடம் தர்ஷினி பற்றி வேறு மாதிரியாக சொல்லி வைக்க அங்கே வந்த ஈஸ்வரி நடந்த அனைத்து உண்மைகளை சொல்லிவிடுகிறாள். ஜீவானந்தம் எவ்வளவு தடுத்தும் ஈஸ்வரி அது புரியாமல் உண்மையை சொல்லிவிடுகிறாள். சந்தேகப்பட்ட இன்ஸ்பெக்டர் நால்வரையும் அமைதியாக உட்கார சொல்லிவிட்டு அவர்களின் போனை வாங்கி வைத்து கொள்கிறார். வேறு ஒரு போலீசை அனுப்பி தர்ஷினி இருந்த இடத்தை போய் பார்த்து விசாரித்து விட்டு வரச் சொல்கிறார்.

Continues below advertisement



இன்ஸ்பெக்டர் குணசேகரனுக்கு போன் செய்து நடந்தைப் பற்றி சொல்லி உடனே அங்கே வர சொல்கிறார்.  அவரும் “உடனே வருகிறேன், அதுவரை இதை அவள்களிடம் சொல்ல வேணாம்” என சொல்லிவிடுகிறார் குணசேகரன். செல்வதற்கு முன்னர் ஜான்சியையும் கரிகாலனையும் வீட்டை விட்டு போகச் சொல்கிறார். அதை கேட்ட ஜான்சி ராணி ஆவேசப்படுகிறாள்.

கதிர், சக்தி, தர்ஷன் என அனைவரும் பெண்களுக்கு போன் செய்து பார்க்க, யாருமே போனை எடுக்கவில்லை என்றதும் டென்ஷனாகிறார்கள். மறுபக்கம் விசாரிக்க சென்ற போலீஸ் வந்து “ஈஸ்வரி சொன்ன அனைத்தும் உண்மை” என சொல்ல இன்ஸ்பெக்டர், ஜீவானந்தத்தை முறைத்து பார்க்கிறார். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 



போலீஸ் ஸ்டேஷன் வந்த குணசேகரன் ஜீவானந்தத்தை பார்த்து "உனக்கும் என்னோட குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்? அத சொல்லு முதல" என அவமானப்படுத்தி பேச "நிறுத்துங்க நீங்க" என ஈஸ்வரி ஆவேசப்படுகிறாள்.

வீட்டில் ஆதிரை விசாலாட்சி அம்மாவை சாப்பிட அழைக்கிறாள். "எல்லாக் கலகத்தையும் பண்ணிட்டு, திருப்தியா கொட்டிக்கடி" என ஆதிரையை திட்டி அனுப்பி விடுகிறார்.

 


"அடுத்த வீட்டு பொம்பளைகளை கைக்குள்ள வைச்சுக்கிட்டு சொத்தை எல்லாம் அமுக்க நினைக்குற. அதுக்கு ஏத்த மாதிரி அவன் பொண்டாட்டியும் செத்துப்போனா"  என குணசேகரன் வாய் கூசாமல் பேச, டென்சனான ஜனனி "அவங்க சாவுக்கு நீங்க தான் காரணம்" எனக் கொந்தளிக்கிறாள். அதைப் பார்த்து குணசேகரன் முறைக்கிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal ) எபிசோடுக்கான ப்ரோமோ. 

Continues below advertisement