சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (அக்டோபர் 20) எபிசோடில் ஈஸ்வரியை காணவில்லை என வீட்டில் உள்ள அனைவரும் பதற்றமாக பேசுகிறார்கள். சக்தியும் தர்ஷனும் எல்லா இடத்திலேயும் தேடிவிட்டு ஈஸ்வரியை எங்கும் காணவில்லை என வந்து சொல்கிறார்கள். சக்தி ஈஸ்வரியின் அப்பாவுக்கு போன் செய்து அங்கே வந்தாரா என விசாரிக்க போன் செய்கிறான். ஆனால் அவர் ஈஸ்வரியை நினைத்து மிகவும் வருத்தமாக பேச அங்கேயும் ஈஸ்வரி வரவில்லை என தெரிந்துவிடுகிறது. பைக் எடுத்துட்டு போய் ஈஸ்வரியை தேட சொல்லி நந்தினி சொல்கிறாள். 



சக்தியும் தர்ஷனும் கிளம்ப ஈஸ்வரி அழுதுகொண்டே வீட்டுக்கு வருகிறாள். ஏன் அழுகிறாள் என அனைவரும் கேட்கிறார்கள். இந்த வாழ்க்கையை பற்றி நினைத்து அழுது புலம்புகிறாள். விஷயத்தை சுதாரித்து கொண்டு பிள்ளைகள் அனைவரையும் போய் தூங்க சொல்கிறார்கள் ரேணுகாவும் நந்தினியும். 


"நம்மிடம் உண்மையாக இருப்பவர்களிடம் ஏன் நம்மால் உண்மையாக இருக்க முடியவில்லை" என பயங்காரமாக ஜனனியிடம் அழுது புலம்புகிறாள். "இது எல்லாத்துக்கும் அப்பத்தா நடத்த போற பங்க்ஷனில் முடிவு தெரியும். அப்பத்தா மிகவும் நம்பிக்கையுடன் கிளம்பி போய் இருக்காங்க. நல்ல ஒரு மாற்றம் கிடைக்கும். தைரியமா இருங்க" என்கிறாள் ஜனனி. "அந்த பங்க்ஷன்ல தான் அவங்க..." என ஈஸ்வரி இழுக்க "நிச்சயம் மாற்றம் வரும்" என ஜனனி நம்பிக்கை கொடுக்கிறாள். 


அடுத்த நாள் காலை ஜீவானந்தம் வெண்பாவை ஃபர்ஹானாவிடம் விட்டுவிட்டு ஊருக்கு போயிட்டு வருவதாக சொல்லிவிட்டு சொல்கிறார். முதலில் வெண்பா அவர்களோடு இருக்க மறுத்தாலும் பின்னர் சம்மதிக்கிறாள். 


அனைவரும் ஊருக்கு செல்ல தயாராக இருக்க வீணாக பிள்ளைகளை வம்புக்கு இழுக்கிறார் விசாலாட்சி அம்மா. அவர்களின் அம்மாக்களை பற்றி  கேவலமாக விசாலாட்சி அம்மா பேச கோபமான பேர பிள்ளைகள் எதிர்த்து பேசுகிறார்கள். அவர்கள் பேசுவதை கேட்ட கதிர் பிள்ளைகளை அடக்குகிறான். 



கதிரும் கரிகாலம் எங்களுக்கு நிறைய வேலை இருக்கு அதனால நாங்க  ஊருக்கு கிளம்புறோம் என சொல்கிறார்கள். அப்போது நந்தினி அங்கே வந்து கிண்டலாக "என்ன கரிகாலா ஏதோ ஏற்பாடு செய்ய போகிறோம் என பேசுனீர்களே அது திருவிழா ஏற்பாடு தானே இல்லை வேறு ஏதாவதா?" என கேட்க கதிர் அவளை பார்த்து முறைக்கிறான். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.