சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (ஜனவரி 29) எபிசோடில் கதிர் தான் திருந்தி விட்டதாக சொல்லி ஞானத்துடன் தர்ஷினியை தேடி செல்ல கிளம்ப, குணசேகரன் அவர்களை திட்டி "இனி நான் தனி ஆள். எனக்கு யாரும் தம்பிகள் கிடையாது. என்னோட பிள்ளையை நானே தேடி கண்டுபிடித்து கொள்கிறேன்" என சொல்கிறார். "இவனுங்க பொண்டாட்டி எங்க இருக்காளுங்க என நான் சொல்லவா. அவளுங்க ஜீவானந்தத்தை காப்பாத்துறதுக்காக அங்க ஓடி போயிருக்காளுக. என்னோட மகளை எதிரி கிட்ட சேத்துட்டாளுங்க. நான் பாத்துக்குறேன்" என சொல்லி கிளம்பி விடுகிறார். அவர் அவமானப்படுத்தி பேசியதை நினைத்து கதிரும் ஞானமும் கண் கலங்குகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யாவுக்கு ரேணுகா போன் செய்து பேசுகிறாள். ஐஸ்வர்யா ரேணுகாவிடம் "அப்பாவும் சித்தப்பாவும் போன் பண்ணி விசாரிக்கிறாங்க, ஆனா அவங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கல" என சொல்லிக்கொண்டு இருக்க அதை ஞானம் பார்த்து "யார்கிட்ட பேசிட்டு இருக்க?" என கேட்கிறான். அதை பார்த்து ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள். ராமசாமியையும், கிருஷ்ணசாமியையும் சென்று சந்திக்கிறார் குணசேகரன். அவர்களிடம் "என்னுடைய பொண்ணையே தூக்கிட்டான். அவனுக்கு வக்காலத்து வாங்குவது என்னோட எதிரி எஸ்.கே.ஆர் பொண்டாட்டி " என ஆவேசமாக பேசி கொண்டு இருக்கிறார்.
மறுபக்கம் ஹாஸ்பிடலில் ஈஸ்வரி நான் சென்று தர்ஷினியை தேடுகிறேன் என சொல்ல "இதுவரைக்கும் சேர்ந்து தானே வந்து இருக்கோம். நீங்க தனியா போக வேண்டாம். நம்ம பிள்ளையை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வரலாம் அக்கா" என ஜனனி ஈஸ்வரியிடம் சொல்கிறாள். இது தான் இன்றைய (ஜனவரி 30) எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.