சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் ஜனனியின் அப்பா நாச்சியப்பன் சொத்துக்கு ஆசைப்பட்டு தனது குடும்பத்துடன் போய் இணைந்து கொள்ள கைவிடப்பட்ட தன்னுடைய அம்மாவை வீட்டுக்கு அழைத்து செல்கிறார்கள் ஜனனி மற்றும் சக்தி. வீட்டுக்கு வந்த சம்பந்தியை விசாலாட்சி அம்மா அவமானபடுத்த கோபத்தில் கொந்தளித்த சக்தி நானும் வீட்டை விட்டு போகிறேன் என சொன்னதும் வாயை மூடி கொள்கிறார் விசாலாட்சி அம்மா. அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
வீட்டுக்கு வந்த ஞானம், விசாலாட்சி அம்மாவிடம் "உன்னோட ஆசை மகள் ஆதிரை இருக்கா இல்ல அவ எங்க மூணு பேர் மேலையும் கேஸ் கொடுத்து இருக்கா..." என சொல்ல அதை கேட்டு விசாலாட்சி அம்மா அதிர்ச்சி அடைய கதிர் கோபத்தில் கொந்தளிக்கிறான். ஆனால் அந்த இடத்தில் இருந்த நந்தினிக்கும் சக்திக்கும் இந்த தகவல் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
நாச்சியப்பன் செய்த இந்த துரோகத்தால் இடிந்து போய் இருக்கும் ஜனனியும் அவளின் அம்மாவும் இந்த பிரச்சினையை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள். ஜனனி மெய்யப்பன் குரூப் குடும்பத்தை சேர்ந்தவள் என்பது குணசேகரனுக்கு தெரிந்தால் அவரின் ரியாக்ஷன் எப்படி இருக்கும். ஆதிரை போட்ட இடியால் கடும் கோபத்தில் இருக்கும் குணசேகரன் குடும்பம் எடுத்து வைக்க போகும் அடுத்த ஸ்டெப் என்ன. இனி வரும் எபிசோடுகளில் பார்க்க ஆர்வமுடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.