சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் இதுவரையில் ஜனனியும் சக்தியும் சேர்ந்து தொடங்குவதாக இருந்த பிசினஸ்ஸை கிருஷ்ணன் மெய்யப்பன் என்ற ஒரு கேரக்டர் புதிதாக என்ட்ரி கொடுத்து குடைச்சல் கொடுத்து வந்தது. சில வாரங்களாக கிருஷ்ணனின் காட்சிகள் இடம் பெறாமல் இருந்த நிலையில் கடந்த வாரம் ஜனனியின் பேக் கிரவுண்ட் பற்றி விசாரிக்க குணசேகரன் வீட்டுக்கே வந்து நின்றார் கிருஷ்ணன் மெய்யப்பன்.





குணசேகரன் நடந்த விஷயம் பற்றி கேட்டறிந்து ஜனனிக்கு எதிரானவர் கிருஷ்ணன் என்பதால் எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை போலே அவனுடன் நட்பு பாராட்டுகிறார். ஜனனி மெட்ராஸ் பெண் என்பதை குணசேகரன் மூலம் அறிந்து கொண்ட கிருஷ்ணன் கிளம்புகிறார்.  

நந்தினிக்கு சமையல் ஆர்டர் ஒன்று வந்ததால் அந்த வீட்டுக்கு சென்று சமைக்கும்போது அங்கே எதிர்பாராத விதமாக நந்தினியின் அப்பா விருந்தாளியாக வருகிறார். நந்தினியின் இந்த நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அத்துடன் சென்ற வார எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.



அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

நந்தினி இந்த சமையல் வேலையை செய்வது குறித்து தன்னுடைய அப்பாவிடம் மிகவும் வருத்தப்பட்டு பேசுகிறாள். "இனிமே அந்த வீட்டைப் பற்றி யோசிக்காமல் என்னைப் பற்றியும் தாராவைப் பற்றியும் மட்டும் யோசிக்கப் போகிறேன்" என நந்தினி தன்னுடைய அப்பாவிடம் சொல்கிறாள்.


குணசேகரன் கதிரை ஏதோ வேலையாக வெளியே அனுப்புகிறார். கதிர் கிளம்பும்போது நந்தினி குறுக்கே வந்து "எங்க போறீங்க?" எனக் கேட்க, "கிரைண்டர் வாயை வைச்சுட்டாளே" என சொல்லி நந்தினியை திட்டுகிறார் குணசேகரன். கதிர் கிளம்பிச் செல்ல வழியில் சில மர்ம நபர்கள் கதிரைத் தாக்குகிறார்கள். சரமாரியாக கதிரைத் தாக்கி கீழே தள்ளி விடுகிறார்கள். இதை அந்த வழியாக சென்ற நந்தினியும் தாராவும் பார்க்க, கதிரை நோக்கி ஓடுகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.


 




இந்த பரபரப்பான ப்ரோமோவில் கதிர்  தர்ம அடி வாங்கியதால் எதிர்நீச்சல் தீவிர ரசிகர்களுக்கு உற்சாகமாக இருந்தது. இனியாவது கதிர் திருந்துவானா இல்லையா எனக் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


 




அதே போல ஜனனி பற்றின தகவல்களைக் கேட்டறிந்த கிருஷ்ணனின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும், ஜனனி தன்னுடைய சித்தப்பாவின் மகள் தான் என்ற உண்மை தெரிய வருமா, அது ஜனனிக்கு சாதகமாக இருக்குமா அல்லது பாதகமாக அமையுமா, ஜனனி எப்படி இந்த சிக்கல்களை சமாளிக்க போகிறாள் ஆகிய கேள்விகளுக்கு வரும் எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியல் எபிசோடுகளில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.