சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (ஏப்ரல் 2) எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. ஃபர்ஹானாவிடம் பாதுகாப்பாக இருக்கும் வெண்பாவை பார்ப்பதற்காக ஈஸ்வரி வருகிறாள். பல நாட்களுக்கு பிறகு ஈஸ்வரியை வெண்பா பார்த்ததும் அவளை வந்து கட்டியணைத்து கொள்கிறாள். மிகவும் கவலையுடன் "அம்மாவுக்கு ஆன மாதிரி அப்பாவுக்கும் ஏதாவது ஆயிடுமோனு பயமா இருக்கு" என வெண்பா சொல்ல அப்படி எல்லாம் சொல்ல கூடாது என ஈஸ்வரி வெண்பாவை சமாதானம் செய்கிறாள்.
நேற்றைய எபிசோடில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து ஈஸ்வரி தர்ஷினியைப் பார்க்க, அவளின் ரூமுக்குச் சென்று ஒரு முறை அவளிடம் பேசுகிறேன் என நர்ஸிடம் கேட்கிறாள். முதலில் ஈஸ்வரி பார்த்து பயப்பட்ட தர்ஷினி பின்னர் மெல்ல மெல்ல "ஜீவா அப்பா ரத்தம் கத்தி" என சொல்லிக் கொண்டே மயங்கி விழுந்து விடுகிறாள். உமையாள் கிருஷ்ணாசாமி மற்றும் ராமசாமியை குணசேகரன் வீட்டு வாசலுக்கு வரவழைத்து சித்தார்த் காணாமல் போனதை பற்றி சொல்லி அவனை தேடச் சொல்லி சொல்கிறார். ஜனனியின் சக்தியும் போலீஸ் ஸ்டேஷன் சென்று ஜனனியின் அம்மா தங்கை பற்றி விசாரிக்கிறார்கள். அவர்கள் அங்கு செல்வதற்கு முன்னரே ராமசாமியும் கிருஷ்ணாசாமியும் போலீசிடம் சென்று வீடியோ ஆதாரத்துடன் கம்பளைண்ட் கொடுத்துள்ளார்கள்.
விசாரணை செய்த போலீஸ் ஜனனி மீது எந்த ஒரு பிரச்சினையும் இருப்பது போல தெரியவில்லை என்கிறார். அவளுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக ஜனனியின் அம்மா வீட்டுக்கு சென்று சோதனை செய்தால் ஏதாவது ஆதாரம் கிடைக்கிறதா என பார்க்க முடியும் என சொல்லி போலீஸ் ஜனனியை அழைத்து செல்கிறது. இது தான் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் கதைக்களம்.