Siragadikka Aasai serial July 3 :  விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா அவளுடைய அம்மாவுக்கு போன் செய்து பாட்டியின் பிறந்தநாள் விழாவுக்கு வர சொல்லி சொல்கிறாள். மீனாவின் அம்மா பாட்டிக்கு என்ன பரிசு வாங்கி வரட்டும் என கேட்க "உன்னால என்ன முடியுமோ அதை வாங்கிட்டு வா" என சொல்கிறாள் மீனா. முத்துவும் போனை வாங்கி மீனா அம்மாவிடம் "நீங்க எதுவும் வாங்கிட்டு வர வேண்டாம். பாட்டியும் அது எதையும் எதிர்பார்க்கமாட்டாங்க. நீங்க வந்து ஆசீர்வாதம் வாங்கிட்டு போங்க" என்கிறான். பிறகு மீனாவும் முத்துவும் பாட்டிக்கு என்ன பரிசு வாங்கி கொடுப்பது என்பது பற்றி பேசி கொள்கிறார்கள். 


 



"மீனா : நீங்க கோபத்தை தள்ளி வைத்து விட்டு பொறுமையா என்ன பண்ணா பாட்டி சந்தோஷப்படுவாங்க என்பதை மட்டும் யோசிங்க" என்கிறாள்.


முத்து சென்று பாட்டியை பஸ் ஸ்டாண்டில் இருந்து அழைத்து வருகிறான். வரும் வழியில் அவன் சோகமாகவே இருக்க பாட்டிக்கு சந்தேகம் வருகிறது. 


"பாட்டி : உனக்கு உடம்புக்கு சரியில்லையா? அப்புறம் ஏன் ஒரு மாதிரி இருக்க?


முத்து : இல்லை பாட்டி. நைட் லேட்டா தான் சவாரி முடிச்சுட்டு வந்தேன். சரியான தூக்கம் இல்லை. அதனால தான் ஒரு மாதிரி சோர்வா இருக்கு" என்கிறான். 


அப்போது வழியில் ஒரு பெண் கழுத்து நிறைய நகை போட்டு இருப்பதை பற்றி பேசி கொள்கிறார்கள். 


பாட்டி : அது தங்க நாகையா இல்ல கவரிங் நாகையா என யாருக்கு தெரியும்? என பாட்டி சொல்ல


முத்து : சீக்கிரம் அதை தான் கண்டுபிடிக்குறேன்" என்கிறான்.


பாட்டி : அதை கண்டுபிடிச்சு நீ என்னடா பண்ண போற? என பாட்டி கிண்டல் செய்கிறார். 


பாட்டியை முத்து வீட்டுக்கு அழைத்து வந்ததும் மீனா ஆரத்தி தட்டை எடுத்து கொண்டு வர அதை விஜயா பிடுங்கி ரோகிணியிடமும் ஸ்ருதியிடம் கொடுக்கிறாள். ஆனால் பாட்டி மூன்று பெரும் சேர்ந்து எடுத்தால் தான் நான் வருவேன் எனவும் மீனாவும் ரோகிணி ஸ்ருதியுடன் சேர்ந்து ஆரத்தி எடுக்கிறாள்.


 




வீட்டில் செய்யப்பட்ட அலங்காரத்தை பார்த்து பாட்டி பூரித்து போகிறார். அனைவரும் சந்தோஷமாக பேசி கொள்கிறார்கள். அப்போது பாட்டி அனைவருக்கும் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கிறார். 


"பாட்டி : என்னை சந்தோஷப்படுத்த நீங்க எல்லாரும் ஏதோ பரிசு கொடுப்பீங்க என எனக்கு தெரியும். ஆனா யாரோட பரிசு என்னோட மனசுக்கு ரொம்ப பிடிச்சு இருக்கோ அவர்களுக்கு நான் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க போகிறேன்" என சொல்கிறார். 


அது என்னவாக இருக்கும் என ஒவ்வொருவரும் அவர்களின் மனதுக்கு பட்டதை சொல்கிறார்கள். பாட்டிக்கு எதுவும் செய்ய முடியாமல் போனதை நினைத்து மிகவும் மனசு கஷ்டப்படுகிறான். வீட்டிலேயே இருந்தால் கவரிங் நகை பற்றி நான் பிரச்சினை செய்து விடுவேன் அதனால் நான் வெளியே போய்விட்டு பங்க்ஷன் நடக்கும் போது வருகிறேன் என சொல்லி கிளப்புகிறான். 


அண்ணாமலை பாட்டியிடம் மீனாவும் முத்துவும் நேற்றே சென்று பரிசு வாங்கி வந்தது பற்றி சொல்கிறார். இது தான் இன்றைய எபிசோடுக்கான கதைக்களம்.