Siragadikka Aasai Serial July 29 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயாவையும், மீனாவையும் கோயிலுக்கு அழைத்து சென்ற மீனாவும் முத்துவும் வீட்டுக்கு வருகிறார்கள். போன விஷயம் எல்லாம் நடந்துதா? என பாட்டி கேட்க எல்லாம் சிறப்பாக நடந்துச்சு பாட்டி என கிண்டலாக சொல்கிறான் முத்து.


அண்ணாமலை "விஜயா போய் தண்ணி கொண்டுவா" என சொல்ல விஜயாவின் முகமே மலர்ந்து போகிறது. அனைவருக்கும் அதை பார்த்து சந்தோஷமாக இருக்கிறது. 



அண்ணாமலை தண்ணீர் குடித்து கொண்டு இருக்க அவர் கழுத்தில் இருக்கும் சிகப்பு மச்சம் பற்றி கேட்க அது மச்சம் இல்ல அம்மாவோட பொட்டு என சொல்லி அனைவரும் கிண்டல் செய்கிறார்கள். 


"பாட்டி : கணவன் மனைவிக்குள் சண்டை வந்தா இப்படி ஒருவருக்கொருவர் பேசாமல் எல்லாம் இருக்க கூடாது. உடனே பேசி சந்தனம் ஆகிவிட வேண்டும். உங்களை பார்த்து தான் உங்களின் பிள்ளைகள் கற்றுக்கொள்வார்கள்" என சொல்கிறார்.


பாட்டி ஊருக்கு கிளம்புகிறேன் என சொல்ல முத்து கொண்டு போய் அவரை பஸ் ஸ்டாண்டுக்கு அழைத்து செல்கிறான். 


ரவி ஸ்ருதியை கட்டிபிடிக்க ஸ்ருதி அவனை தள்ளிவிடுகிறாள். என்கிட்டவே நெருங்காத என ஒதுங்குகிறாள். 


ஸ்ருதி : நான் குழந்தை பெத்துக்க மாட்டேன். இப்போ மட்டும் இல்ல எப்பவுமே பெத்துக்க மாட்டேன். இப்போ தான் அதுக்கு நிறைய ஆப்ஷன்ஸ் வந்துடுச்சு இல்ல. ஒரு வாடகை தாய் மூலமா பெத்துக்கலாம். அதுவும் நம்ம குழந்தை தானே.


ரவி : என்ன ஸ்ருதி சொல்ற? அந்த பீல் எல்லாம் அனுபவிக்கனும் என உனக்கு ஆசையே இல்லையா? எங்க அம்மா அப்பா இதுக்கு ஒதுக்க மாட்டாங்க. ஏன் உங்கள் வீட்ல கூட இதுக்கு எல்லாம் சம்மதிக்க மாட்டாங்க.


ஸ்ருதி : அவங்க எதுக்கு ஒத்துக்கணும். இதுல நான் தான் முடிவு எடுக்கணும்.


ரவி : சரி இப்போ இதை பத்தி பேச வேணாம். நமக்கு முன்னாடி இரண்டு பேர் இருக்காங்க இல்ல. அப்புறமா நாம இதை பத்தி பேசிக்கலாம். 


ஸ்ருதி : எப்போ இருந்தாலும் இது தான் என்னோட முடிவு" என்கிறாள் ஸ்ருதி. ரவி ஸ்ருதி பேசியதை நினைத்து அதிர்ச்சி அடைகிறான்.  


மனோஜ் அவனுக்கு வந்த மொட்டை கடுதாசி பற்றி நினைத்து தூங்காமல் அதை பற்றியே யோசித்து கொண்டு இருக்கிறான். விஜயாவுக்கு போன் பண்ணி ஹாலுக்கு வர சொல்கிறான். விஜயா சலித்து கொண்டே வெளியில் வருகிறாள்.


மனோஜ் அந்த லெட்டர் பற்றி சொல்ல "மாசாமாசம் 50 ஆயிரம் கொடுக்க சொன்னாங்கன்னு புதுசா பிளான் போடுறியா? என கேட்கிறாள். 


 




"மனோஜ் : எனக்கு யார் இதை பண்ணி இருப்பா என தெரிஞ்சுடுச்சு. உங்களை நகை விஷயத்துல மாட்டிவிட்டதால பார்வதி ஆண்டியோட சேர்ந்து இப்படி பண்ணி இருக்கீங்க தானே. இனி நான் யாரையும் நம்ப போறது இல்ல.


விஜயா : அட பாவி... உனக்கு போய் சப்போர்ட் பண்ணி நான் இந்த வீட்ல அசிங்கபட்டா நீ என்னையே சந்தேகப்படுறியா" என மனோஜை அடிக்கிறாள் விஜயா. 


முத்து வாங்கிய புதிய காரை ஓட்டுவதற்காக முத்துவின் நண்பன் ஒருவன் வீட்டுக்கு வருகிறான். அண்ணாமலை கார் சாவியை அந்த பையனிடம் ஆசீர்வாதம் பண்ணி கொடுக்கிறார். 


வழக்கம் போல விஜயா நக்கலாக பேசுகிறாள். அந்த நேரம் ரூமில் இருந்து வெளியே வந்த மனோஜும் ரோகிணியும் என்ன நடக்கிறது என புரியாமல் பார்கிறார்கள். 


அந்த புது டிரைவரிடம் "காரை பார்த்து பத்திரமாக ஓட்ட வேண்டும். கெட்ட பழக்கம் எல்லாம் வைச்சுக்கிட்டு வண்டி ஓட்ட கூடாது. ப்ரெண்ட் வேற வேலை வேற. அதனால பார்த்து பொறுப்பாக ஓட்டணும்" என மீனா கண்டிஷன் போடுகிறாள். 


அண்ணாமலையும் மீனா சொல்வது சரி தான் என்கிறார். அத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் முடிவுக்கு வந்தது.