Siragadikka Aasai serial August 19 :  விஜய் டிவியின் மிகவும் பிரபலமான தொடரான 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய (ஆகஸ்ட் 19 ) எபிசோடில் சிட்டியிடம் வட்டிக்கு பணம் வாங்கியவரை அடியாட்களுடன் வீட்டுக்கு சென்று மிரட்டியதால் அங்கு சவாரிக்கு வந்த முத்து சிட்டியை கண்டித்து அனுப்புகிறான். ஏற்கனவே முத்து மீது கொலை காண்டில் இருந்த சிட்டி மீண்டும் இப்போது முத்து அவனிடம் வம்புக்கு வந்ததால் மேலும் பொங்குகிறான்.




சிட்டியுடன் வந்த சத்யாவுக்கு அட்வைஸ் செய்கிறான். "சீதா மாதிரி படிச்சு முடிச்சுட்டு நல்ல வேலையா பாத்து போற வழிய பாரு. இவன் கூட எல்லாம் சுத்திகிட்டு இருக்காதா. தேவையில்லாத பிரச்சினையில் மாட்டிக்காத" என முத்து சொல்ல "என்னோட வேலையை நான்  பாத்துக்குறேன். நீங்க உங்களோட வேலையை பாருங்க" என சொல்லி அனுப்பி விடுகிறான்.


சீதாவை பார்த்து வாழ்த்து சொல்வதற்காக ஸ்ருதி அவள் வேலை செய்யும் ஹாஸ்பிடலுக்கு போகிறாள். சீதாவை நலம் விசாரித்துவிட்டு அவளுக்காக ரவியும் ஸ்ருதியும் சேர்ந்து வாங்கிய வாட்சை பரிசாக கொடுக்கிறாள். அப்போது குழந்தை பெற்றுக்கொள்வதை பற்றி அவளுக்கு இருக்கும் பயத்தை சொல்லி அங்கு யாரவது வாடகை தாயாக இருக்க ரெஜிஸ்டர் செய்து இருக்கிறார்களா என விசாரித்து சொல்ல சொல்கிறாள் ஸ்ருதி.


அதை கேட்டு சீதாவுக்கு ஷாக்காக இருக்கிறது. இந்த விஷயம் வீட்ல யாருக்கும் தெரிய வேண்டாம் என்றும் குறிப்பதாக மீனாவிடம் சொல்ல வேண்டாம் என்றும் சொல்கிறாள். அதற்கு எவ்வளவு செலவானாலும் அதை பார்த்து கொள்ளலாம் என ஸ்ருதி சொல்ல சீதாவுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.




சத்யாவுக்கு பிறந்தநாள் என்பதால் மீனாவின் அம்மா கோயிலில் பூஜைக்கு சொல்லி இருப்பதாகவும் கூழ் ஊற்றுவதாக வேண்டி இருப்பதாகவும் கூறுகிறார். அந்த நேரத்தில் மீனா வீட்டுக்கு வர, அவளையும் கோயிலுக்கு வர சொல்கிறார்கள். அப்போது சத்யா "அக்கா மட்டும் வந்தா போதும் அந்த ஆள் வரக்கூடாது" என சொல்ல மீனா சத்யாவை கண்டிக்கிறாள்.


ஆனால் மீனாவின் அம்மா மாப்பிளையையும் அழைத்து கொண்டு கோயிலுக்கு வரச்சொல்கிறார்.


வீட்டுக்கு வந்த மீனா முத்துவிடம் இந்த விஷயம் பற்றி சொல்ல கோயிலுக்கு போவது பற்றி சொல்கிறாள். முத்துவை சத்யா வரக்கூடாது என சொன்னதை முத்துவே கணித்து விடுகிறான். "என்னை மதிக்காத இடத்துக்கு நீ போக கூடாது மீனா" என சொல்லிவிட்டு செல்கிறான் முத்து.


அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த ஸ்ருதி மீனா கவலையுடன் இருப்பதை பார்த்து என்ன விஷயம் என விசாரிக்கிறான். மீனா நடந்தது சொல்ல "சத்யா உங்க தம்பி. அவரோட பிறந்தநாளுக்கு போக கூடாது என சொல்ல முத்துவுக்கு எந்த ரைட்ஸும் கிடையாது. நீங்க போயிட்டு வாங்க" என மீனாவை ஏத்தி விடுகிறாள் ஸ்ருதி. இதை விஜயா கேட்டுவிடுகிறாள். இது தான் இன்றைய எபிசோட் கதைக்களம்.