மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் ஷக்தி வெற்றியை சந்தித்து நன்றி தெரிவிக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு, எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும்.


முன்னதாக நேற்றைய எபிசோடில் இனி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்னவென்று பார்க்கலாம். சங்கிலி, சக்தி மற்றும் வெற்றி, பூஜா என நால்வரும் ஒரே ஜவுளி கடைக்கு வருகிறார்கள். எதிர்பாராத விதமாக வெற்றி மற்றும் சக்தி என இருவரும் லிப்டில் செல்ல இருவரும் ஒருவரை ஒருவர் திட்டி சண்டை போட்டுக் கொள்கின்றனர். வெற்றி ஆவேசத்தில் லிப்ட் பட்டனை தட்ட லிப்ட் ஸ்ட்ரக் ஆகி பாதியில் நிற்கிறது. அடுத்து சக்தி மயங்கி வெற்றியின் மீது விழுகிறாள்.


இதனை பார்த்த சங்கிலி வெற்றியை தீர்த்துக் கட்ட முடிவு செய்கிறார். அடியாட்களை வைத்து வெற்றியை அடிக்க சென்ற நிலையில் அவருக்கு கத்திக்குத்து விழுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெற்றிக்கு சக்தி இரத்தம் கொடுக்கிறார். தான் இரத்தம் கொடுத்தது வெற்றிக்கு தான் என பின் தெரிய வருகிறது. வீட்டிற்கு வரும் சக்தி மீனாட்சியிடம் தெரிந்த நண்பருக்கு இரத்தம் கொடுத்ததாக பொய் சொல்கிறார். 






இந்நிலையில் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வரும் சக்தி வெற்றி எடுத்து கொடுத்த புடவையை பார்த்து பீல் பண்ணுகிறாள். அடுத்து மூன்று நாள் கழித்து வெற்றி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வரும் நிலையில் துர்கா சக்திக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்கிறார்.


உடனே அவர் வெற்றியை சந்தித்து நன்றி கூறுகிறாள்.இதனையடுத்து கார்த்தியின் அப்பா அம்மா வந்து இன்னும் 10 நாளில் திருமணம் வைத்துக்கொள்ள வேண்டும் என அழுத்தம் கொடுக்கின்றனர். இதனையடுத்து கோகிலா புஷ்பாவிடம் உங்களுக்காக தான் யமுனா, கார்த்தி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன் என சொல்கிறார். ஆனா; இந்த கல்யாணம் நடக்காது, மணமேடை வரை வந்து நிற்கும் என புஷ்பா கோகிலாவுக்கு வாக்கு கொடுக்கிறாள்.


இதன்பின்னர் நீதிமணி, சங்கிலி திருமண பத்திரிக்கைகளை கொண்டு வந்து கொடுத்து, டிசைன் பிடித்திருக்கிறதா என கேட்க மீனாட்சி பிடிக்கவில்லை என அதிர்ச்சி கொடுக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.