மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சக்தி தனக்கு திருமணம் நடக்காமல் போவதற்கு வெற்றி தான் காரணம் என திட்டுவது தொடர்பான காட்சிகள் இடம் பெறுகிறது. 


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும்.


முன்னதாக சக்தியை பொண்ணு பார்க்க மாப்பிள்ளை  அவரைப் பற்றி வழியில் தவறான விஷயங்களை கேள்விப்பட்டேன் எனக் கூறி அவளைப் பற்றி தப்பாக பேசுகிறார். இதை பார்த்த மீனாட்சி கோவமாக மாப்பிள்ளையை அறைந்து மாப்பிள்ளை வீட்டினரை விரட்டுகிறார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்ன என்பதை காணலாம். 


மீனாட்சி மாப்பிள்ளை வீட்டாரை துரத்தி அடிக்க, இதை சங்கிலி பார்த்து சந்தோஷப்படுகிறான். இதனால் சக்தி கோபமாக செல்ல வழியில் வெற்றியின் பைக்கை பார்த்து கோயிலுக்குள் செல்கிறாள். வெற்றியும் அவனுடன் நண்பர்களும் சாமியிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். சக்தி வெற்றியை சந்தித்து நின்னு போன வரனுக்கு நீ தான் காரணம் என சக்தி பழி போடுகிறார். ஆனால்  நடந்ததற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வெற்றி சாமி முன் சத்தியம் செய்கிறான்.


இதனையடுத்து சக்தி நீதான் தவறான தகவலை மாப்பிள்ளையிடம் கொடுத்தது என்று சொல்கிறார். பின்னர் தவறாக தகவல்களை யார் கொடுத்தது என்று வெற்றி யோசிக்க வெற்றியின் நண்பர்கள் சங்கிலி தான் இப்படி பண்ணி இருப்பான் என்று அவன் மேல் சந்தேகப்படுகின்றனர். நீதிமணியும் புஷ்பாவும் மீனாட்சி வீட்டிற்கு வர என்ன விஷயம் என்று மீனாட்சி நீதிமணியிடம் கேட்கிறார்.  சங்கிலியை சக்திக்கு மணம் முடிக்க சம்மதம் பேசுவதற்காக நானும் புஷ்பாவும் வந்திருக்கிறோம் என்று மீனாட்சியிடம் நீதிமணி சொல்கிறான்.






மீனாட்சி அதை கேட்டு தாம்பூல தட்டை தூக்கி எறிகிறார். சங்கிலிக்கு நான் சக்தியை கொடுக்க முடியாது என சொல்லி, நீதிமணியும் புஷ்பாவையும் திட்டி வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். இதனால் சக்தியை நான் சங்கிலிக்கு எப்படியாவது திருமணம் முடித்து வைப்பேன் என புஷ்பா சபதம் போட்டு அங்கிருந்து செல்கிறார். 


சாந்தாவும் சக்தியும் ரோட்டில் செல்லும்போது சங்கிலி சக்தியை பார்க்க வருகிறார். அப்போது சாந்தா சக்தியிடம் சங்கிலிக்கிட்ட பேச வேண்டாம் என சொல்லுவது, எனக்காக உன்னை பொண்ண பார்த்த விஷயம் கேள்விப்பட்டு வந்தேன் என சங்கிலி சக்தியிடம் சொல்கிறான்.


சங்கிலி திருமணத்திற்கு விருப்பம் என சக்தியிடம் சொல்வது மட்டுமல்லாமல், நான் ஒரு ரவுடி தான் உன்னை திருமணம் செய்தால் இது எல்லாத்தையும் விடுவேன் என சங்கிலி சக்தியிடம் சொல்ல ஷக்தியும் யோசிக்க அப்போது வெற்றி வருவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.