அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் அன்னலட்சுமிக்காக அமுதா மார்கெட்டில் சண்டை போடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 


விறுவிறுப்பாக செல்லும் சீரியல் 


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர்.


தன் அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக இருக்கும் செந்திலை வாத்தியார் என நினைத்து காதல் கொள்கிறார் அமுதா. அந்தக்காதல் திருமணம் வரை சென்ற நிலையில் செந்திலை பற்றிய உண்மை தெரிய வருகிறது. இதன் பிறகு இந்த சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பது விறுவிறுப்பாக செல்வதால் ரசிகர்களின் பேவரைட் சீரியலாக அமுதாவும் அன்னலட்சுமியும் உள்ளது. 


முன்னதாக வட்டிக்கு வாங்கிய பணத்தை கட்ட செந்தில், அமுதா, அன்னலட்சுமி ஆகியோர் ஒருவருக்கொருவர் தெரியாமல் ஒரே கல்யாண மண்டபத்தில் சமையல் வேலை செய்வதை, அமுதாவின் அப்பா சிதம்பரம் பார்த்து அதிர்ச்சியடையும் காட்சிகள் நேற்றைய எபிசோடில் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம். 






சந்தையில் பழனி ஏற்பாடு செய்த ஆட்கள் கடன் தொகையை கேட்டு அன்னலட்சுமியை சேலையை பிடித்து இழுப்பதோடு புவனாவையும் கீழே தள்ளி விடுகிறார்கள். அவர்கள் அவமானப்படுவதை சந்தையே வேடிக்கை பார்க்கிறது. இதனையடுத்து அன்னலட்சுமி நடந்ததை வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என புவனாவிடம் சொல்கிறாள்.அவரும் சரி என சொன்ன நிலையில்  வெளியில் இருந்து வரும் அமுதா அவர்களை பார்க்கும்போது இருவரும் கண் கலங்கி இருப்பதை தெரிந்து ஏதோ நடந்துள்ளது என்பதை யூகித்து கொள்கிறாள்.


பின் என்ன நடந்தது என அமுதா  கேட்க அன்னலட்சுமி மார்கெட்டில் நடந்தவற்றை மறைப்பதோடு மழுப்பும் வகையில் பதிலளிக்கிறார். இதனையடுத்து அமுதா புவனாவிடம் சென்று உண்மையை சொல்லுமாறு சொல்ல, புவனா அழுதபடியே நடந்தவற்றை மறைக்க முடியாமல் சொல்லி விடுகிறார். இதனால் கடும்  கோபம் கொள்ளும் அமுதா மாணிக்கம், செந்திலுக்கு போன் செய்து நடந்தவற்றை கூறி உடனே வருமாறு கூறுகிறார்.


மேலும் அன்னலட்சுமி, புவனாவை அழைத்துக் கொண்டு அமுதா மார்க்கெட்டுக்கு வருகிறார். அப்போது அன்னலட்சுமியை பார்க்கும் வட்டிக்கடைக்காரன் என்ன பணம் கொண்டு வந்துட்டியா கொடு கொடு என கேட்கிறார். இந்தா நான் குடுக்குறேன் என அவர்களை விலக்கி விட்டு ஹைஸ்பிடீல் அமுதா வருகிறார். அதனை வட்டிக்கடைக்காரன் ஏளனமாக பார்க்க, அமுதா அவனை அடி வெளுக்கிறாள்.


சண்டையில் அமுதா வட்டிக்கடைக்காரன் வேட்டியை உருவி விடுகிறார். அப்போது அங்கு  வேகமாக வந்து பார்க்கும் செந்தில் அமுதாவின் இன்னொரு முகத்தை பார்த்து ஷாக்காகிறார்.  இதனையடுத்து அன்னலட்சுமி உணர்ச்சி பெருக்குடன் அமுதாவை கட்டியணைத்து நீ தான்ம்மா என் குலசாமி, அவமானப்பட்டு நிக்குற என் குடும்பத்தை நீ தான்  தலைநிமிர வைச்சிட்டே என பெருமிதம் கொள்ளும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.