மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் யமுனாவின் நிச்சயத்தை வெற்றி தடுத்து நிறுத்தும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது. 


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும். விறுவிறுப்பாக போகும் இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை காணலாம். 






வெற்றி துர்காவுக்கு கால் செய்ய துர்கா அக்காவுக்கு நிச்சயதார்த்தம் என சொல்லிவிட்டு போனை கட் பண்ணி விடுகிறாள்‌. நிச்சயதார்த்தத்துக்கு யமுனாவை அலங்காரம் செய்து அழைத்து வர நிச்சயதார்த்த சபையில் எல்லோருக்கும் யமுனா வணக்கம் சொல்கிறாள்.பின்னர் நிச்சயதார்த்த தட்டை மாத்திக்கொள்ள அனைவரும் தயாராக இருக்கும் நிலையில் வெற்றி ஜீப்பில் அங்கு வருகிறார். 


வந்த வேகத்தில் வீட்டினுள் வந்து நிச்சயதார்த்த தட்டை எட்டி உதைத்து கலாட்டா செய்கிறான். அங்கே வெற்றி நிச்சயதார்த்தத்தை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் யமுனாவிற்கு தான் இந்த நிச்சயம் என தெரியாமல் சக்தியும் நானும் ஒருத்தருக்கு ஒருத்தர் காதலிக்கிறோம் என சொல்லி கோவமாக பேசி அங்க இருந்து போகிறான். உடனே புஷ்பா சக்தியை தவறாக பேச அதை தாங்க முடியாத சாந்தா எல்லோரிடமும் மீனாட்சி தனது மூன்று மகள்களையும் நன்றாக தான் வளர்த்தாள் என்று வாக்குவாதம் செய்கிறார். 


இதனையடுத்து மாப்பிள்ளை கார்த்தியின் தாயும் தந்தையும் கோவமாக இந்த நிச்சயதார்த்தம் நடக்காது என்று அங்கிருந்து கிளம்ப மீனாட்சி புஷ்பாவிடம் இந்த நிச்சயதார்த்தம் நிக்கிறதுக்கு நீ தான் காரணம் என சொல்கிறாள். பிறகு அங்கிருந்து இருந்து புஷ்பாவும் கிளம்புகிறாள்.


அடுத்து மீனாட்சி தனது மகள்களிடம் வெறுப்பாக பேசி வீட்டுக்குள்ளே செல்ல, நடந்த அனைத்தையும் யோசித்த சக்தி வீட்டிலிருந்து ரோட்டுக்கு நடந்து செல்கிறாள். யமுனா மீனாட்சியை சமாதானப்படுத்த இந்த பக்கம் கார்த்தி தாயும் தந்தையும் வீட்டுக்கு வந்த பிறகு மாறி மாறி இந்த கல்யாணம் வேண்டாம் என கூறுகின்றனர். கார்த்தி  நீங்கள் யமுனாவையும் யமுனா குடும்பத்தையும் தவறாக புரிந்து கொண்டு பேசுகிறீர்கள் என சொல்ல, அவனது தாயும் தந்தையும் யமுனாவை பிரிக்க பிளான் செய்கின்றனர்.இந்த பக்கம் வீட்டுக்கு வெளியே வந்த கார்த்தி சக்தியை பார்த்து அதிர்ச்சியடைவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.