Maari: சூர்யா, மாரியை பிரிக்க தாரா போடப்போகும் திட்டம் என்ன? மாரி சீரியலின் இன்றைய எபிசோட் இதோ..!

கோவிலுக்கு போலாமா என்று மாரி சூர்யாவை அழைத்துச் செல்கிறார். அங்கு வைத்து மாரிக்கு சூர்யா பூ வைத்து விட இருவரும் ஒன்றாக சாமி கும்பிடுகின்றனர்.

Continues below advertisement

மாரி சீரியலில் மருத்துவமனைக்கு  சூர்யாவும், மாரியும் செல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

Continues below advertisement

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் சூர்யா மாரியை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்று டாக்டரிடம் காட்டுகிறார்.  மாரியை பரிசோதிக்கும் டாக்டர் ஊசி போடுவதாக சொல்ல அவரோ ஊசியை எனக்கு அதெல்லாம் வேண்டாம் என பயப்படுகிறாள்.

ஆனால் சூர்யா இது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்ல. மனசுல உனக்கு பிடிச்ச விஷயத்தை நினைச்சுக்கோ ஊசியோட வலி தெரியாது என்று சொல்லி சமாதானப்படுத்துகிறார். உடனே மாரி கண்ணை மூடி நினைத்துக் கொள்ள சூர்யா கனவில் வருகிறான். டாக்டர் ஊசி போட்ட பின்பு வெளியே வரும் மாரியிடம் சூர்யா நீ யாரை மனசில் நினைச்சிக்கிட்ட என கேட்டுக்கொண்டே நான் கரெக்டா சொல்லட்டா என கேட்கிறார். மாரியும் யாருன்னு கேட்க உன் அம்மா, இல்லைன்னா தாத்தா, அதைவிட்டா உனக்கு பிடிச்ச அம்மனை நினைச்சியா என கேட்க மாரி இல்லை என சொல்கிறாள்.

அப்படினா வேற என்னதான் நினைச்ச அப்படின்னு கேட்க உங்களை நினைச்சேன் என்று சொன்னவுடன் சூர்யா லவ் ஃபீல் செய்கிறான். அடுத்து மாரி கோவிலுக்கு போகணும், கோவிலுக்கு போலாமா என்று மாரி சூர்யாவை அழைத்துச் செல்கிறார். அங்கு வைத்து மாரிக்கு சூர்யா பூ வைத்து விட இருவரும் ஒன்றாக சாமி கும்பிடுகின்றனர். பின்பு வீட்டுக்கு வந்து அனைவரிடமும் கோவிலுக்கு போன விஷயத்தை சொல்ல அனைவரும் சந்தோஷப்பட தாரா கடுப்பாவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola