சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் நந்தினி குணசேகரன் மீது சொன்ன குற்றச்சாட்டுகளை வைத்து கதிர் குணசேகரனிடம் சண்டை போடுவான் என எதிர்பார்த்தால் அவன் நந்தினிக்கு எதிராக, ”அவளை ஏன் பேச விட்டு வேடிக்கை பாத்தீங்க” என குணசேகரனுக்கு சப்போர்ட்டாக பேசுகிறான். 


குணசேகரன் கதிரிடம் "நீ எங்க போன? அங்க என்ன நடந்தது? என்பதை உளறிவிடாதே. கவனமாக இருந்து கொள். நான் எல்லாத்தையும் பார்த்து கொள்கிறேன். நீ பொறுமையாக இரு" என சொல்லி கதிரை அனுப்பி வைக்கிறார்.



அவமானப்பட்ட நந்தினி நொந்து போகிறாள். மிகவும் விரக்தியாக பேசிக்கொண்டு இருக்கும் போது ஜனனி வருகிறாள். ஜீவானந்தம் மனைவியை யாரோ சுட்டு கொன்றதை பற்றி சொல்லி வருத்தப்படுகிறாள். அனைவரும் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள். "ஜீவானந்தம் சொத்தை அவர் பெயரில் மாற்றி எழுதியதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கு. அதை அப்பத்தா எழுந்து சொன்னால் தான் தெரியும்" என ஜனனி சொல்ல "அப்பத்தா கண்முழிச்சுட்டாங்க" என நந்தினி சொல்கிறாள். 


குணசேகரன் அப்பத்தாவிடம் எப்படி கடுமையாக நடந்து கொண்டார் என்பதை பற்றி சொல்கிறார்கள். ஜனனி வேகவேகமாக அப்பத்தாவை பார்ப்பதற்காக ஓடுகிறாள். ஆனால் அங்கே வாசலில் குணசேகரன் உட்கார்ந்து கொண்டு ஜனனியை முறைக்கிறார். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.


வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் ஒன்றாக சமையலறையில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஜனனி இல்லாத சமயத்தில் வீட்டில் என்ன நடந்தது? என்பதை பற்றி ஜனனியிடம் சொல்லி கொண்டு இருக்கிறார்கள். கதிர் மிகவும் பதற்றமாக எதைப்பற்றியோ யோசித்து கொண்டு இருக்கிறான். 



"இவங்க தான் ஜீவானந்தம் மனைவியை கொன்னுபோட்டு இருப்பாங்க" என சொல்கிறாள் ஜனனி. "எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு" என நந்தினி சொல்கிறாள். அடுத்த நாள் காலையில் எல்லாரும் அப்பத்தாவை காணவில்லை என அதிர்ச்சியாக இருக்கிறார்கள். "வீட்டில இத்தனை பேர் இருக்கோம். இந்த கிழவி காணாம போயிட்டானு சொன்னா என்ன அர்த்தம்?" என குணசேகரன் கேட்கிறார். 



"உங்க தம்பியையும்தான் காணும். அங்குட்டு சம்பவம் பண்ண அனுப்பிட்டு இங்க நாடகம் போட்டுட்டு திரியுறீங்களா?" என ரேணுகா சரியான செருப்படி கொடுக்க "என்ன பண்ணீங்க அப்பத்தாவ?" என கோபமாக கேட்கிறாள் ஜனனி. அனைவரும் ஒரே குழப்பமாக பார்க்கிறார்கள். இதுதான் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட். 




அப்பத்தாவை யார் கடத்தி இருப்பார்கள்? கதிரா, ஜனனியா அல்லது குணசேகரனா? யாருடைய வேலையாக இருக்கும். அப்பத்தாவை என்ன பண்ண போறாங்க? கதிர் பதற்றத்தின் காரணம் என்ன? ஜீவானந்தத்திற்கு உண்மை தெரிந்ததா? எதிர் நீச்சல் (Ethir neechal) சீரியலின் இந்த எபிசோட்டின் பரபரப்பான கட்டத்தை அடைகிறது