Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ (Kizhakku Vaasal) சீரியலில் இன்றைக்கு (ஆகஸ்ட் 24) ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம்.


கிழக்கு வாசல் சீரியல் 


தனது ராடன் மீடியா நிறுவனத்தின் மூலம் நடிகை ராதிகா  விஜய் டிவியில் ‘கிழக்கு வாசல்’ சீரியலை தயாரித்துள்ளார். இந்த சீரியல் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இயக்குனர் எஸ் .ஏ.சந்திரசேகர், நடிகைகள் ரேஷ்மா முரளிதரன்,தாரிணி, நடிகர்கள் ஆனந்தபாபு, வெங்கட் ரங்கநாதன், அருண் குமார் ராஜன், ரோஜா ஸ்ரீ, கிரண் மாயி, அஸ்வினி ராதா கிருஷ்ணா, கீதா நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த சீரியல் தினமும் இரவு 10 மணிக்கு விறுவிறுப்பாக  ஒளிபரப்பாகி வருகிறது.


இன்றைய எபிசோட் அப்டேட்


ரேணு பிரச்சினையில் நடேசனுக்கும், சாமியப்பனுக்கும் இடையே சண்டை வெடிக்கிறது. இதனால் அதிருப்திக்கு உள்ளாகும் சாமியப்பன் வீட்டை விட்டு வெளியேறி விட்டு சிறிது நேரத்தில் வருகிறார். கையில் ஒரு பேப்பருடன் வரும் அவர், வீட்டில் இருந்த அனைவரையும் கூப்பிடுகிறார். கடைசியாக தங்கை மங்கையை கூப்பிடும் போது அவர் அழுதுக்கொண்டே வருகிறேன். நடேசன் உங்களை அப்படி பேசியதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என தெரிவிக்க, மங்கைக்கு சாமியப்பன் ஆறுதல் தெரிவிக்கிறார். இதனைக் கேட்டு நடேசனுக்கு டென்ஷன் ஏறுகிறது. 


அப்போது ஷண்முகமும் வீட்டுக்கு வர, அம்மா அழுததை பார்த்து என்னவென்று விசாரிக்கிறான். இப்படியான நிலையில், உங்களுக்கு கொல்லி போட போவது நான் தான் என நடேசன் சொன்னதால், யாரும் என் உடம்புக்கு உரிமைக் கொள்ள வேண்டாம் என சொல்லி, உடலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானம் கொடுப்பதாக எழுதி வைத்து விட்டதாக தெரிவிக்கிறார். இதனைக் கேட்டு குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். அழுது புலம்புகின்றனர். பார்வதி நடேசனை மன்னிக்குமாறு காலில் விழுந்து கேட்கிறாள். ஆனால் தன்னுடைய முடிவில் சாமியப்பன் உறுதியாக இருக்கிறார். 


இதனிடையே அர்ஜூன் கார் சைக்கிள் சென்ற சிறுவன் மீது மோதுகிறது. இதனை பார்க்கும் ஷண்முகம் சிறுவனை மீட்டு அனுப்பின் வைக்கிறான். இதற்கிடையில் சிறுவனை அர்ஜூன் திட்ட, பதிலுக்கு ஷண்முகம் அவனை திட்டுகிறான். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்ற, ரேணு விவகாரத்திலேயே உன்னை ஏதாவது பண்ணியிருக்க வேண்டும் என ஷண்முகம் சொல்ல, இருவரும் அடித்துக் கொள்கின்றனர். இதனால் டென்ஷனாகும் அர்ஜூன் ஷண்முகத்தை மிரட்டி விட்டு செல்கிறான். 


இதனிடையே வீட்டில் சாமியப்பனிடம் சிவகாமி நடந்ததை நினைத்து பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது அங்கு வரும் பார்வதி மீண்டும் சாமியப்பனிடம் மன்னிப்பு கேட்கிறாள். ரேணுவும் நடந்ததை நினைத்து வருத்தப்பட, தயாளன் வந்து சண்டை போட்டாது மட்டும் தானே உனக்கு தெரியும், அவனை படிக்க வைத்ததே உங்க அப்பா தான் என சிவகாமி சொல்கிறார். இதனைக் கேட்டு ரேணு கண்கலங்குவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.