சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஈஸ்வரியையும் தர்ஷனையும் காணவில்லை என பதற்றத்தில் இருக்கிறார்கள் ஜனனியும் சக்தியும். அந்த நேரத்தில் புதிய பைக்கில் அவர்கள் இறங்குவதை பார்த்து அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். உடனே பிரச்சனை செய்த வந்துவிட்டார்கள் கதிரும் ஞானானும். "ஏன் இப்படி குடும்ப மானத்தை வாங்குறீர்கள்? எங்க அண்ணன் 13  வயசுல இருந்து கஷ்டப்பட்டு ஏங்க வளர்த்தார் ஆனா இந்த பையன் இப்படி பேசுறான்" என் ஞானம் சொன்னதும் "அவர் அப்பா செத்து கஷ்டப்படுத்துனாரு இவர் உயிரோட இருந்து கஷ்டப்படுத்துறாரு" என சொன்னதும் கதிர் தர்ஷனை ஓங்கி அறைந்து விடுகிறான். பெரிய கைகலப்பே நடக்கிறது. அனைவரும் சேர்ந்து தடுத்து விடுகிறார்கள்.




இரவு தர்ஷனும் தர்ஷினியும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது தர்ஷன் ஜீவானந்தத்தை சந்தித்தது பற்றியும் வெண்பா எவ்வளவு அழகாக பேசுகிறாள் என்பதை பற்றியும் சொல்லி ஒருமுறை நீ அவரை சந்திக்க வேண்டும் என தர்ஷினியிடம் சொல்லி கொண்டு இருக்கிறான். அப்போது தர்ஷினி இது போல ஒருவர் நமக்கு அப்பாவாக இருந்தால் எப்படி இருக்கும் என சொல்ல அதை கேட்டுக்கொண்டு இருந்த கதிர் எகிறிக்கொண்டு வருகிறான்.



இந்த பிரச்சினை பெரிய அளவில் வெடிக்க ஈஸ்வரியுடன் மற்றவர்களும் வந்து தடுக்கிறார்கள். "அந்த தாடிக்காரன் அப்பனாக வந்து இருந்தால் நல்லா இருக்குமாம். நீ தானே இதை இவங்களுக்கு சொல்லி கொடுத்து வளக்குற" என ஈஸ்வரியை மோசமாக கதிர் பேச, திருப்பி லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டாள் ஈஸ்வரி.

"அநாவசியமாக பேசாத... உங்களை வெட்டிட்டு போக எங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும். இதை வீட்ல யாரும் யாருக்கும் அடிமை கிடையாது" என சொல்லிவிட்டு அங்கிருந்து அனைவரும் சென்றுவிடுகிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. நேற்றைய எபிசோட் முழுவதும் குணசேகரன் அவ்வப்போது வந்து சென்றது ரசிகர்களின் கண்களை குளமாக்கியது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


அனைவரும் ஒன்றாக வீட்டின் டைனிங் டேபிள் அருகே இருக்கிறார்கள். விசாலாட்சி அம்மா சக்தியிடம் "டேய் சக்தி உங்க அண்ணனை பாத்தியா டா" என கேட்கிறார். "இல்லையே மா மேல நான் பாக்கலையே" என்கிறான்.


மாடிக்கு சென்ற ஞானம் மேஜையில் போனும் அது அடியில் ஒரு லெட்டரும்  இருப்பதை பார்க்கிறான். அதை பார்த்து படித்துவிட்டு "என்ன அண்ணே இது... டேய் கதிர் வாடா டேய்" என அழைக்கிறான். ஞானம் அலறுவதை கேட்ட அனைவரும் அதிர்ச்சியாகி ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு மாடிக்கு ஓடுகிறார்கள். சக்தி லெட்டரை வாங்கி படிக்க கதிர் அவனிடம் இருந்து புடுங்க முயற்சிக்கிறான். அவனை தள்ளி விட்டு சக்தி லெட்டரை படிக்கிறான். கதிர் அனைவரையும் பார்த்து கத்துகிறான். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.

 



குணசேகரன் கதாபாத்திரமாக மறைந்த நடிகர் மாரிமுத்துவை நேற்று வரை வாய் பேசாமல் அமைதியாக வந்து போவது போல காட்டினார்கள். ஆனால் இனி நடிகர் மாரிமுத்துவை எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியலில் பார்க்க முடியாது என்பது ரசிகர்களுக்கு வருத்தமாக உள்ளது. அதே சமயத்தில் புதிய குணசேகரனாக யார் வர போகிறார் என்பது ஒரே சஸ்பென்சாகவே இருக்கிறது.