விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் பரபரப்பான கட்டத்தில் இன்றைய எபிசோடில் என்ன ட்விஸ்ட் நடக்கிறது என்பதை  பார்க்கலாம். 


அமிர்தா, ராமமூர்த்தி என இருவரும் வீடு முழுக்க தேடியும் லைசென்ஸ் கிடைக்கவில்லை. எழில் வந்ததும் லைசென்ஸ் கிடைக்காததை பற்றி பாக்கியாவுக்கு போன் செய்து சொல்கிறான். "கவலைப்படாத அம்மா பாத்துக்கலாம்" என பாக்கியாவுக்கு ஆறுதல் சொல்கிறான். 



பாக்கியலட்சுமியின் ஒரிஜினல் லைசென்ஸை திருடிவிட்டு கோபி தனது நண்பனை ஹோட்டலில் சந்திக்கிறார். அப்போது பாக்கியா ஆக்சிடென்ட் செய்தது அவளின் லைசென்ஸ் தொலைந்தது. அதனால் ஒரிஜினல் லைசெக்ஸை அனைவரும் தேடி கொண்டு இருப்பது, அதை கோபி வீட்டின் இன்னொரு சாவியை வைத்து வீட்டுக்குள் சென்று எடுத்துவிட்டு வந்தது என அனைத்தையும் தனது நண்பனிடம் சொல்லி கொண்டு இருக்கிறார். இதை அனைத்தையும் எதேச்சையாக அங்கு வந்த பழனிச்சாமி கேட்டுவிடுகிறார். 


ஒரு வில்லன் போல கோபி பாக்கியா போலீசில் மாட்டிக்கொண்டதை நினைத்து சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார். இப்படி செய்வது நல்லதல்ல என கோபியின் பிரெண்ட் சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. "என்ன ஆட்டம் ஆடுனா. அவளோட லிமிட் தாண்டி ஆடுனா. அவ ஸ்டேஷன்ல உட்கார்ந்தாலும் எனக்கு கவலை இல்லை" என்கிறார் கோபி. அம்மாவும் இனியாவும் பத்திரமா நான் அனுப்புனா காரில் வந்து விடுவார்கள் என் சொல்லி பாக்கியாவின் லைசென்ஸை உடைத்து தூக்கிபோட்டுவிடுகிறார். 


இது அத்தனையையும் பார்த்து கொண்டு இருந்த பழனிச்சாமி, கோபி கீழே போட்டு சென்ற லைசென்ஸை எடுத்து போட்டோ எடுத்து இனியாவுக்கு அனுப்பி வைக்கிறார். அதற்குள் அங்கு இன்ஸ்பெக்டர் எவ்வளவு நேரம் டைம் கொடுக்குறது. வண்டியில ஏறுங்க என சொல்லி பாக்கியாவை ஜீப்பில் எற சொல்கிறார்கள். 



அப்போது பழனிச்சாமி இனியாவுக்கு போன் செய்து லைசென்ஸை அனுப்பியதை பற்றி சொல்கிறார். அவளும் போலீசிடம் லைசென்ஸ் வந்துவிட்டது என சொல்லி அதை காட்டுகிறாள். அதை பார்த்த இன்ஸ்பெக்டர் எங்க போனாலும் லைசென்ஸ் கையில் வைச்சுக்கோங்க என அட்வைஸ் செய்கிறார். 


அதே நேரத்தில் கான்ஸ்டபிள் ஒருவர் வந்து சிசிடிவி பூட்டேஜ் பார்த்துவிட்டு "இந்த அம்மா மேல எந்த தப்பும் இல்ல.. அந்த சைக்கிள்காரர் தான் வேகமாக வந்து விழுந்து இருக்கிறார்" என சொல்ல இன்ஸ்பெக்டர் பாக்கியாவை கிளம்ப சொல்கிறார். 


கோபி இனியாக்கு போன் செய்து அம்மாவும் நீயும் கிளம்பிட்டிங்களா? ட்ரைவர் பிக் பண்ணிட்டாரா? என கேட்க "இல்ல டாடி நீங்க அனுப்புன வண்டில நாங்க வரல. நாங்க நாலு பேரும் தான் வந்துகொண்டு இருக்கிறோம்" என இனியா. அதிர்ச்சியான கோபி "லைசென்ஸ் இல்ல போலீஸ் பிரச்சினை என சொன்ன" என சொல்ல "இல்ல டாடி பழனிச்சாமி அங்கிள் போட்டோ எடுத்து அனுப்பி இருந்தாரு" என சொல்கிறாள். இந்த ட்விஸ்டை சற்றும் எதிர்பார்க்காத கோபி அதிர்ச்சியில் உளறுகிறார். அத்துடன் இன்றைய (Baakiyalakshmi) எபிசோட் முடிவு வந்தது.