சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் நேற்றைய எபிசோடில் குணசேகரன் குடும்ப நண்பர் ஒருவர் தனது மகள் திருமண அழைப்பிதழை வைத்து விட்டு செல்வதற்காக வந்துள்ளார். அந்த நேரம் பார்த்து தர்ஷினியின் நண்பன் ஒருவன் அவளிடம் இருந்து நோட்ஸ் பெற்று செல்வதற்காக குணசேகரன் வீட்டுக்கு வருகிறான்.


முதலில் தர்ஷன் நண்பன் என தவறாக நினைத்து கொண்டவர்கள் பின்னர் தர்ஷினியின் நண்பன் என தெரிந்ததும் ஷாக்காகிறார்கள். "ஏன் ஆம்பள பிள்ளைங்க கிட்ட எல்லாம் புக் வாங்கி படிக்க மாட்டியா? அது என்ன பொம்பள பிள்ளை வீட்டுக்கு வந்து நோட்ஸ் வாங்குற பழக்கம். காலம் கெட்டு போய் கிடக்கு" என அநாகரீகமாக குணசேகரன் பேசிக்கொண்டேபோக அதை தாங்கிக் கொள்ள முடியாத தர்ஷினி நண்பனை மாடிக்கு அழைத்து செல்கிறாள்.


அப்பா என்று கூட பார்க்காமல் மேலே சென்ற தர்ஷினி செய்த இந்த செயலால் அந்த பையனை மரியாதையா வீட்டை விட்டு வெளியே போ என மிரட்டுகிறார் குணசேகரன். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.



அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு வந்து இருந்த தர்ஷினியின் நண்பன் "இந்த வீட்டில என்னால எந்த பிரச்சனையும் வேண்டாம். நான் கிளம்புகிறேன்" என சொல்லி விட்டு கிளம்புகிறான். அதற்கு குணசேகரன் ”மரியாதையா ஓடிப் போயிடு" என்றதும்  "அப்பா போதும் நிறுத்துங்க. காட்டுமிராண்டி கூட்டத்தை பத்தி நல்லா தெரிஞ்சு இருந்தும் இவனை இங்க கூட்டிட்டு வந்தது என்னோட தப்பு தான். உங்கள எல்லாம் அப்பான்னு சொல்லவே அசிங்கமா இருக்கு" என்கிறாள் தர்ஷினி. இதை சற்றும் எதிர்பார்க்காத குணசேகரன், “என்ன அப்பான்னு சொல்ல அசிங்கமா இருக்கா?" எகிறுகிறார். அதற்கு பிறகு அவர் வசைகளை அள்ளி வீச அங்கிருந்த அனைவரும் மிகவும் அசிங்கமாக போகிறது. 


 




மறுபக்கம் பட்டம்மாளின் 40% ஷேர் முழுவதும் எதிர்பார்த்தபடி ஜீவானந்தம் பெயருக்கு மாற்றப்பட்டு விட்டது என்ற தகவலை அவரிடம் தெரிவிக்கிறாள் ஃபர்ஹானா. இதனால் ஜீவானந்தம் அமைப்பில் இருந்து அனைவரும் மிகவும் உற்சாகத்துடன் காணப்படுகிறார்கள். அத்துடன் இன்றைய எபிசோடுக்கான  ப்ரோமோ முடிவடைகிறது.  


பட்டம்மாள் பெயரிலிருந்து ஷேர் ஜீவானந்தம் பெயரில் மாற்றட்டப்பட்டது குணசேகரனுக்கு தெரியவந்தால் பெரிய பூகம்பமே வெடிக்க போகிறது. இனிவரும் எபிசோட் மிகவும் ஸ்வாரஸ்யமாக இருக்கப்போகிறது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.