சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ரேணுகா வீட்டுக்கு வந்த டீச்சர் மற்றும் அந்த இரண்டு பிள்ளைகளையும் அழைத்து கொண்டு மாடியில் உள்ள ரூமுக்கு வேக வேகமாக செல்கிறாள். "இங்க வீட்டுல யாருக்கும் இது பத்தி தெரியாது. மன்னிச்சுக்கோங்க" என்கிறாள். 


 



கீழே கரிகாலன் குணசேகரனை ஏத்தி விடும் படி "இந்த வீட்ல உங்களுக்கு எதிராக பல சதி வேலைகள் நடக்குது" என்கிறான். விசலாட்சி அம்மா அவனை திட்ட "எனக்கு என்னவோ உங்க மேல தான்  டவுட்" என்கிறான். அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல பெரியவனே. நானும் காலையில இருந்து இங்க தானே இருக்கேன்" என சொல்கிறார். "பிள்ளைகளை விட்டு கொடுக்குறதே உனக்கு வேலையாபோயிருச்சு" என சொல்கிறார் குணசேகரன். "எனக்கும் இங்க நடக்குற சதி வேலை எல்லாம் தெரியும். ஆனால் யாரோட வலையிலும் நான் சிக்கமாட்டேன். பார்ப்போம் யார் சிக்குறா யார் தப்பிக்கிறா என்பதை" என்கிறார். 



கரிகாலன் நானும் ஒரு டிகிரி ஹோல்டர் அதனால மேல என்ன டியூஷன் நடக்குதுன்னு நான் போய் பார்த்துட்டு வரேன் என மாடிக்கு செல்கிறான். அதற்குள் ஈஸ்வரி ரேணுகாவுக்கு போன் செய்து கரிகாலன் மேலே வருவதை பற்றி சொல்லி விடுகிறாள். கரிகாலன் குட்டி போட்ட பூனை போல வாசலில் அங்கேயும் இங்கேயும் அலைகிறான். கதவு தாழ்ப்பாள் போட்டு இருப்பதால் தள்ளி தள்ளி பார்க்கிறான். ரேணுகா வெளியில் வந்து "என்ன வேவு பார்க்க சொல்லி அனுப்பி வைச்சங்களா. அனாவசியமா ஏதாவது விஷயத்துல நொழஞ்ச முகரையில மூக்கு வாய் கண்ணு காது எதுவுமே இருக்காது. ஓடி போயிடு" என மிரட்டி விரட்டி விடுகிறாள். 


 



ரேணுகா டீச்சரிடம் மன்னிப்பு கேட்கிறாள். "குழந்தைகள் ஆவலுடன் படிக்க வந்து இருக்குங்க அதுகளுக்கு நிம்மதியான ஒரு சூழலை ஏற்படுத்தி கொடுக்க முடியல அது தான் வருத்தமா இருக்கு. இந்த வீட்ல கெட்டதுக்கு தான் மதிப்பு, நல்லதுக்கு யாரும் சப்போர்ட் செய்ய மாட்டாங்க" என சொல்லி வருத்தப்படுகிறாள். பின்னர் டான்ஸ் கத்துக்க வந்த குழந்தைகளுக்கு சில முத்திரைகளை சொல்லி கொடுக்கிறாள் ரேணுகா. 


அம்மாவை பார்ப்பதற்காக நந்தினி வீட்டுக்கு வருகிறாள். ஸ்வீட் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கிறாள். என்ன விசேஷம் என ஆர்வமாக கேட்கிறார்கள். நந்தினி அம்மாவுக்கு பணம் கொடுக்க அவர்கள் ஏது உனக்கு இவ்வளவு பணம் என பதட்டத்துடன் கேட்கிறார்கள். நந்தினி கேட்டரிங் ஆர்டர் எடுத்து இருப்பது குறித்து சொல்லி நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்லி முதல் சம்பள பணத்தில் கொஞ்சம் கொடுக்க தான் இப்போ என்னால முடிந்தது என சொல்லி கொடுக்கிறாள். 



நந்தினியின் அப்பா அவளின் வாழ்க்கையை சீரழித்தது பற்றி சொல்லி வருத்தப்பட்டு அவளுக்கு இந்த உதவி செய்ததற்கு ஜனனிக்கு நன்றி சொல்கிறார். "நீ நல்லா இருந்தா தான் அம்மா எனக்கு தைரியமே. உன்னோட பொண்ணு இப்போ ஒரு தொழில் அதிபர்" என சொல்லி நந்தினி அவளுடைய அம்மாவை அணைத்து கொள்கிறாள். ஜனனி இதை பார்த்து சந்தோஷப்பட்டாலும் மனசுக்குள் தன்னுடைய அப்பா அம்மாவை நினைத்து வேதனை படுகிறாள். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.