சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வரியாவின் பள்ளியில் குழந்தைகளுக்கு நடனம் கற்று தரும் ஆசிரியர் வரமுடியாது என கூறியதால் ரேணுகா அவர்களுக்கு கற்று கொடுக்க நான் முயற்சிக்கிறேன் என சொல்கிறாள். பள்ளி ஆசிரியை இன்றைக்கே நல்ல நாள். அதனால் இன்னைக்கே கொஞ்சமாக ஆரம்பிக்கலாம் என கூறுகிறார். அதனால் ரேணுகா குழந்தைகளுக்கு இன்று சொல்லிக் கொடுக்கிறேன் என அருமையாக ஆடி அனைவரையும் அசத்தி விடுகிறார்.
ஜீவனந்தத்தால் பாதிக்கப்பட்ட நபருக்காக பெண் போலீஸ் அதிகாரி, சக்தி மற்றும் ஜனனி காத்துகொண்டு இருக்கிறார்கள். அந்த நேரத்தில் அவர் வருகிறார். நீங்கள் தான் குணசேகரன் பேமிலியா என கேட்கிறார். எதிரில் இருப்பது போலீஸ் அதிகாரி என தெரிந்ததும் அலறி அடித்துக் கொண்டு கிளம்புகிறார். "ஜீவனந்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் தான் நீங்கள் கூப்பிட்டதும் வந்தேன். ஆனால் போலீசை வைத்து கொண்டே பேசுறீங்க. ஜீவானந்தத்திற்கு தெரிந்தால் அவ்வளவு தான்" என்கிறார். ஜனனி அவரிடத்தில் "அவங்க அஃபிஷியலா வரவில்லை எங்களுடைய ப்ரெண்டா தான் வந்து இருக்காங்க" என சொல்கிறாள். "பணத்தையும் பறிகொடுத்து உயிரையும் கொடுக்க முடியாது" என்கிறார் அந்த நபர். "அவங்களுக்கும் இந்த விஷயத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இப்ப தான் நாங்க அவங்கள பாக்குறோம். நான் குணசேகரன் தம்பி இது என்னுடைய மனைவி" என்கிறான் சக்தி. அதற்கு பிறகு தான் வந்த அந்த நபர் அமைதியாகிறார்.
இந்த தகவல் போதும் நான் பார்த்து கொள்கிறேன் என ஜனனி சொல்ல "நீங்க என்ன வேணாலும் பண்ணிக்கோங்க. ஆனா தயவு செய்து என்னை மட்டும் மாட்டி விட்டுராதீங்க. நீங்களும் உங்க குடும்பத்தில் இருக்கிறவங்களும் ஜாக்கிரதையா இருங்க" என சொல்லவிட்டு செல்கிறார் அந்த நபர். ஜனனி தீவிரமாக என்ன செய்வதென யோசித்து கொண்டு இருக்கிறாள்.