சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தனை நாட்களாக மிகவும் சீரியஸாக நகர்ந்த கதைக்களம் நேற்று கொஞ்சம் காமெடி கலந்து இருந்தது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தது. ஆதிரை - அருண் திருமணம் எப்படி நடக்கப்போகிறது என்ற டென்ஷன் ஒரு புறம் இருந்தாலும் கரிகாலன் வாங்கும் மொக்கைகள் சிரிக்க வைத்தது. 


 



பல நாட்களாக ஆதிரை திருமணம் ஜவ்வு போல இழுத்து வந்த நிலையில் விசாலாட்சி அம்மா குலதெய்வ கோயிலுக்கு பிராத்தனை செய்ததாக கூறி அதிரை, நந்தினி, ரேணுகா, ஜனனி நால்வரையும் டிராமா செய்து கதிருடன் அனுப்பி வைத்தார். கூடவே கரிகாலனும் ஓட்டிக்கொண்டு சென்றான். காரில் அவர் கோயிலுக்கு சென்று கொண்டு இருக்கும் போது கரிகாலன் லூசு தனமாக பேசி கொண்டே அனைவரையும் இம்சை செய்து வருகிறான். கதிரை எப்படி கழட்டி விடுவது என்பதை பற்றி ஜனனியும் நந்தினியும் பேசிக்கொண்டு வருகின்றனர். அந்த சமயத்தில் நந்தினி ஜனனியிடம் பிளான் ஒன்றை கூறுகிறாள். ஜனனியுடன் வேலை செய்த ஒரு பெண்ணுக்கு போன் செய்து அவளை கதிரிடம் பேச சொல்கிறாள். 


போன் மூலம் இந்த தகவல் சொல்வதற்காக காரைவிட்டு கீழே இறங்குவதற்காக கோயிலில் பூஜை செய்வதற்காக பூ, பழம் எல்லாம் வாங்க வேண்டும் அதனால் கடை ஓரமாக பார்த்து காரை நிறுத்த சொல்கிறார்கள். காரை விட்டு இறங்கியதும் விஷயத்தை ஜனனி தனது தோழியிடம் பேசிவிடுகிறாள். தோழியும் கதிருக்கு போன் போட்டு மிகவும் பழக்கமான ஒருவர் போல பேச கதிர் யார் பேசுவது என தெரியாமல் சுமதி தானே என அவனே சொல்லிக்கொள்கிறேன். அந்த பெண்ணும் உடனே நீங்கள் இங்கு வரவேண்டும் இல்லை என்றால் நான் மண்டபத்துக்கு வந்து விடுவேன் என மிரட்ட திணறிப் போன கதிர் உடனே வருகிறேன் வை போனை என வைத்துவிடுகிறான். 


மனைவி, அண்ணியிடம் கையெழுத்து போடுவதற்காக என்னை கூப்பிடுகிறார்கள் நான் உடனே செல்ல வேண்டும் என சொல்லி அங்கு இருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறான். போகும் போது இவர்கள் அனைவரும்  கிரிமினல்கள் அதனால் கவனமாக இவர்களை கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போய்விட்டு மண்டபத்திற்கு சென்று விடுங்கள் நான் நேரடியாக மண்டபத்திற்கு வந்து விடுகிறேன் என கூறிவிடுகிறான். 


 



மற்றவர்கள் அனைவரும் கோயிலுக்கு செல்ல அங்கே அர்ச்சனை  செய்ய பூசாரி பேர் கேட்டதும் நந்தினி, ஆதிரை அருண் என கூற ஷாக்கான கரிகாலன் புலம்புகிறான். என்ன பிளான் பண்றீங்களா நான் உடனே மாமாவுக்கு போன் பண்ணிடுவேன் என மிரட்டுகிறான். அவனை எப்படியோ சமாளித்த ரேணுகா எனக்கும் ஆதிரைக்கும் கல்யாணம் சீக்கிரமா நடக்கணும் என 108 முறை கண்களை மூடி சொல்ல சொல்கிறாள். அந்த பைத்தியமும் அவள் சொன்னது போலவே கூற அதற்குள் அங்கிருந்து நால்வரும் எஸ்கேப் ஆகி விடுகிறார்கள். 


ஒரு வழியாக ஆதிரை எஸ்கேப் ஆனாலும் திருமணம் எப்படி நடக்க போகிறது, குணசேகரன் ரியாக்ஷன் எப்படி இருக்க போகிறது என்பது எல்லாம் அடுத்த வாரம் தெரிய வரும். அடுத்த வாரமும் மிகவும் ஸ்வாரஸ்யமாக இருக்க போகிறது என்பதால் ஆர்வமாக இருக்கிறார்கள் எதிர்நீச்சல் ரசிகர்கள்.