சைத்ரா ரெட்டி :


சின்னத்திரையில் 'யாரடி மோகினி ' என்னும் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை  சைத்ரா ரெட்டி . நடித்தது வில்லி கதாபாத்திரம் என்றாலும் சைத்ராவை தமிழ் ரசிகர்கள் கொண்டாட துவங்கினர். அதே நேரம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரிலும் நடித்து வந்தார். தற்போது சன் தொலைக்காட்சியின்  கயல் சீரியல்  கதாநாயகியாக நடித்து வருகிறார். சைத்ரா ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர். கல்லூரி நாட்களில் கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவரை மேடை ஒன்றில் கண்ட சின்னத்திரை இயக்குநர் இவரை தெலுங்கு சீரியலில் அறிமுகம் செய்திருக்கிறார். அதன் பிறகு கன்னட சீரியல்களில் வாய்ப்பு வந்தது. பின்னர்தான் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.







கணவரை பற்றி சைத்ரா :


 பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராகேஷ் சமலா என்பவரை  சைத்ரா ரெட்டி காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் அப்போது இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டது.





தனது கணவர் குறித்து பகிர்ந்த சைத்ரா ரெட்டி , எங்கள் இருவருள் அதிக அன்புடன் இருப்பது என் கணவர்தான் என்றார். எனக்கு கோபம் வந்தால் நான் அப்படியே காட்டிவிடுவேன் . ஆனால் அவர் அமைதியாக எனக்கு புரியும்படி எடுத்துக்கூறுவார். ஏதாவது முக்கியமாக செல்ல வேண்டிய பயணங்களில் எனக்கு ஷூட்டிங் இருக்கிறது , வெளியூர் போக வேண்டும் என்றால் அந்த சூழலை புரிந்துக்கொள்வார்.என் கணவருக்காக நான் எதையுமே மாற்றிக்கொண்டது கிடையாது. ஆனால் எனக்காக அவர் நிறைய அவர் மாற்றிக்கொள்வார். எனக்கு பிடிக்காத விஷயங்களை அவர் செய்ய மாட்டார் " என்றார் சைத்ரா.