பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவை பழிவாங்க கோபி ராதிகாவுக்கு ஐடியா சொல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாகிறது. 


எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த சீரியலின் ஹீரோ கோபி, குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல், அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார்.


அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.


குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர்  வீட்டில் திட்டியதால் கோபியுடன் இனியா செல்கிறார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.


ராதிகாவுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த பாக்யா 


மண்டப ஓனர் ராஜசேகர் அழைப்பின் பேரில் ஐடி கம்பெனி ஒன்றில் ஓனரை கேட்டரிங் காண்டிராக்ட் விஷயமாக பாக்யா சந்திக்க செல்கிறார். அவருடன் ஜெனியும் சென்ற நிலையில் ரூ.7 லட்சம் டெபாசிட் கட்டுங்க. காண்டிராக்ட் தர்றோம் என சொல்ல பாக்யாவை சமாதானப்படுத்தி ஜெனி சம்மதிக்க வைக்கிறார். இவர்கள் இருவரும் ஓனரை சந்தித்து விட்டு வருவதை அதே ஆபீஸில் வேலை செய்யும் ராதிகா பார்த்து அதிர்ச்சியடைகிறார்.


பின்னர் ஓனரிடம் சென்று என்னவென்று விசாரிக்கும் போது சமையல் காண்டிராக்ட் விஷயத்தை சொல்கிறார். உங்களுக்கு வேணாம்னா நான் அந்த ஆர்டரை கேன்சல் பண்றேன் ராதிகா என ஓனர் சொல்ல, நீங்க என்ன முடிவு பண்ணாலும் எனக்கு ஓகே தான் என ராதிகா தெரிவிக்கிறார். 


மன்னிப்பு கேட்ட கோபி 




ராதிகாவை சந்தித்த கோபி வீட்டில் நடந்த சம்பவத்தை எண்ணி மன்னிப்பு கேட்கிறார். இனியா இப்படி உடனே என்னோட வருவான்னு எதிர்பார்க்கல, அதேசமயம் அவ பின்னாடி எங்கப்பா வந்துட்டாரு என தன் பக்க நியாயத்தை சொல்ல, ராதிகாவும் எனக்கு இனியாவிடம் பேச எந்த பிரச்சனையும் இல்ல என தெரிவிக்கிறார். நான் ரொம்ப எதிர்பார்ப்போட தான் உங்களை கல்யாணம் பண்ணிகிட்டேன்.

 

ஏற்கனவே நிறைய கஷ்டங்களை பார்த்துட்டேன் என சொல்ல கோபி சமாதானம் செய்கிறார். மேலும் இனிமேல் பிரச்சனை வர்றப்ப மயூ என் பொண்ணு அப்படின்னு பிரிச்சி பேசாத...நான் இனியாவும், மயூவும் என் இரண்டு கண்ணா தான் பார்க்கிறேன் என பாசத்தை பொழிகிறார்.அப்போது ஸ்கூலில் இருந்து கோபிக்கு போன் வருகிறது. சுற்றுலா சென்ற இனியாவின் பஸ் விபத்தை சந்தித்ததாக தெரிவிக்க, அவர் அதிர்ச்சியடைந்து உடனடியாக ஸ்கூலுக்கு செல்கிறார். 

 

பாக்யாவுக்கு வந்த போன் கால் 


வீட்டில் எழில் ஒருமாதிரி இருப்பதை பார்த்து ஈஸ்வரி என்னவென்று விசாரிக்கிறார். செல்வியும் எழிலின் நிலையை சுட்டிக்காட்ட படம் பண்றது சம்பந்தமா நான் யோசனையா இருக்கேன் என எழில் சமாளிக்கிறார். அப்போது வீட்டுக்கு வரும் பாக்யா 7 லட்சம் கட்ட சொன்ன விஷயத்தை சொல்ல, எழில் வங்கியில் கடன் வாங்கலாம் என தெரிவிக்கிறார். அப்போது இனியாவின் உடன் படிக்கும் நிகிலாவின் அம்மா போன் பண்ணி ஸ்கூல் பஸ் விபத்துக்குள்ளான தகவலை சொல்ல ராதிகா அதிர்ச்சியடைவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.