Baakiyalakshmi serial August 6 : விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான 'பாக்கியலட்சுமி' தொடரின் இன்றைய எபிசோடில் ராதிகா மயூவை அழைத்து கொண்டு ஸ்கூலுக்கு கிளம்ப கோபி வந்து ராதிகாவை நிறுத்தி "நான் மயூவை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போகிறேன்" என சொல்கிறார். ஆனால் அதை காதில் வாங்காமல் ராதிகா மயூவை அழைத்து செல்ல 'குழந்தைக்கு முன்னாடி நமக்கு இருக்க பிரச்சினையை காட்டிக்கணுமா?" என கோபி சொல்ல ராதிகாவும் கோபிக்கும் இடையே வாக்குவாதம் பெருசாக வெடிக்கிறது. 


 


 

வாக்குவாதம் முற்றிப்போக "உனக்காக தானே என்னோட குடும்பத்தை விட்டுட்டு வந்தேன். என்னோட அம்மா என்கிட்டே கோச்சுக்கிட்டு போயிட்டாங்க. எனக்கு வந்த முக்கால்வாசி பிரச்சினைக்கும் நீயும் உங்க அம்மாவும் தான் காரணம்" என சொல்ல கடுப்பான ராதிகா "அப்போ ஏன் இன்னும் இந்த வீட்டிலேயே இருக்கீங்க. என்னை டைவர்ஸ் பண்ணிட்டு கிளம்பி அங்கேயே போக வேண்டியது தானே" என கேட்கிறாள். கோபத்தின் உச்சிக்கு சென்ற கோபி என்ன செய்வதென தெரியாமல் கீழே இறங்கி வந்து காரை கோபமாக துடைத்து கொண்டு இருக்கிறார். 

 

அப்போது பாக்கியா வீட்டு கதவு திறந்து வைத்து கொண்டு ராமமூர்த்தி, ஈஸ்வரி, பாக்கியா அனைவரும் நிலா பாப்பாவுடன் சிரித்து விளையாடி கொண்டு இருக்கிறார்கள். நிலா வாயாடுவதை பார்த்து அனைவரும் சந்தோஷமாக சிரித்து கொண்டு இருக்கிறார்கள். அதை பார்த்த கோபிக்கு இன்னும் ஆத்திரம் அதிகமாகிறது.  "இது எல்லாத்துக்கும் இந்த பாக்கியாதான் காரணம். என்னோட அம்மாவை என்கிட்ட இருந்து பிரிச்சுட்டு இவ இப்போ சந்தோஷமா சிரிச்சுக்கிட்டு இருக்கா" என அதே கோபத்துடன் ரெஸ்டாரண்டுக்கு கிளப்பி போகிறார். 

 


 

ரெஸ்டாரெண்டில் கோபி கணக்கு வழக்குகளை பார்த்து கொண்டிருக்க அப்போது வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் போன் பேசி கொண்டே வருவதை பார்த்து கடுப்பாகி அவரை பிடித்து திட்டுகிறார். ரெஸ்டாரெண்டில் வேலை பார்க்கும் அனைவரையும் அழைத்து வைத்து எது செய்ய வேண்டும் செய்ய கூடாது, லீவ் போட கூடாது என கண்டிஷன் மேல கண்டிஷன் போடுகிறார். 

 

அந்த நேரத்தில் கோபியின் பிரெண்ட் வந்து கோபியை சமாதானம் செய்து வைக்கிறார் செய்கிறார். "இப்படியே ஸ்ட்ரிக்ட்டா நடந்துகிட்டினா எல்லா வேலையாட்களும் கிளப்பி விடுவார்கள்" என பயமுறுத்துகிறார். "இந்த எல்லா பிரச்னைக்கும் காரணம் பாத்தியா தான். எங்க அம்மா என்னை விட்டுபிரிஞ்சு போனதுக்கும் அவ தான் காரணம். அவ மட்டும் சந்தோஷமா இருக்கா" என புலம்புகிறார் பிரெண்டிடம் கோபி.  

 

பாக்கியாவை பார்ப்பதற்காக அவளுடை ரெஸ்டாரெண்டுக்கு பழனிசாமி வருகிறார். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி தொடர் முடிவுக்கு வந்தது.