பாக்யலட்சுமி சீரியலில் ராதிகாவுடனான திருமணத்தை தடுத்து நிறுத்த கோபியின் அப்பா திருமண மண்டபத்துக்கு வரும் காட்சிகள் இன்று இடம் பெற்றுள்ளது. 


ரசிகர்களை கவரும் பாக்கியலட்சுமி 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறியது, . ராதிகா கோபியை திருமணம் செய்ய சம்மதித்தது, இருவரும் திருமணத்துக்கு தயாராகும் காட்சிகள் இடம் பெற்றது.  இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.


தடுமாறி பேசும் கோபி 


ராதிகாவின் குடும்பத்தினர் பாக்யாவின் வருகையை கண்டு கோபியிடம் சரமாரியாக குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக பாக்யாவை வெளியே அனுப்புமாறு சந்துருவிடம் கோபி தெரிவிக்கிறார். அப்போது ராதிகா நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது...என்னை மாலையும் கழுத்துமா தனியா மேடையில நிற்க வச்சுடாதீங்க என கூறுகிறார். அதற்கு கோபி இப்பவே தாலி கட்டுறேன் என கூற, திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணா நல்லாருக்குமா என சொல்லி ராதிகா அம்மா சத்தம் போடுகிறார். 


மேலும் இன்னும் உங்க வீட்டுல இருந்து யார் யார் வந்து பிரச்சனைப் பண்ணப் போறாங்களோ என கோபியிடம் கோபப்படுகிறார். ஆனால் தன் வீட்டில் இருந்து யாரும் வர மாட்டார்கள் என அவர் உறுதியளிக்கும் போது  சந்துருவின் மனைவி உள்ளே வந்து யார் பாக்யா என கேட்க, அவள் என் பொண்டாட்டி என கோபி சொல்ல ராதிகா அதிர்ச்சியடைகிறார். ஆனால் கோபி ஏதேதோ சொல்லி சமாளித்து விட்டு இருவரும் மேடைக்கு செல்கின்றனர். 


மண்டபத்துக்கு வந்த ராமமூர்த்தி 


சமையலறைக்குள் செல்லும் பாக்யா கோபியை நினைத்து அழுகிறார். அதேசமயம் சமையல் ஆர்டரை கேன்சல் செய்வது குறித்து சந்துரு மண்டப மேனேஜருடன் பேசுகிறார். அவரோ ஓனர் வந்தால் தான் தெரியும் என கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார். அப்போது மண்டபத்துக்குள் கோபியின் அப்பா ராமமூர்த்தி வருகிறார். அவரைக் கண்டு அதிர்ச்சியடையும் கோபி மேடையே விட்டு கீழே இறங்கி வந்து என்னவென்று விசாரிக்கிறார். செல்வி ராமமூர்த்தி வந்ததைப் பார்த்து பாக்யாவை கீழே அழைத்து வருகிறாள். 


ராமமூர்த்தி கோபியிடம் உனக்கு வெக்கமா இல்லையா... இந்த வயசுல மாலையும், கழுத்துமா நிற்குற என கேட்க அவர் பதிலுக்கு வாக்குவாதம் செய்கிறார். தான் இப்போது தான் மிகுந்த சந்தோஷமாக இருப்பதாகவும், நீங்க தள்ளுன புதைக்குழில இருந்து இப்பதான் வெளியே வந்ததாகவும் கூறி ராமமூர்த்தியை பிடித்து தள்ளுகிறான். பின்னால் வந்து பிடிக்கும் பாக்யாவை பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைகிறார். ராமமூர்த்தியை பற்றி ராதிகா அம்மா பேசியதும் கொந்தளிக்கிறார். 


கோபியிடம் ராமமூர்த்தி இந்த கோலத்துல உன் பிள்ளைங்க பார்த்தா என்ன நினைப்பாங்க...நீ பாக்யாவை தான் டைவர்ஸ் பண்ணிருக்க..உன் பிள்ளைகளை இல்ல என கூறுகிறார். இந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டேன் என சொல்லிக்கொண்டே மாலையை இழுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.