பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவுக்கு, கோபிக்குமான கல்யாணம் ஒருவழியாக நடந்து முடிந்துள்ளதால் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர். 


ரசிகர்களை கவரும் பாக்கியலட்சுமி 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.



கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறியது, ராதிகா கோபியை திருமணம் செய்ய சம்மதித்தது, இருவரும் திருமணத்துக்கு தயாரானது, திருமணத்தை நிறுத்த கோபி குடும்பத்தினர் முயற்சிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றது.  இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.




ஒருவழியாக நடந்த கல்யாணம் 


ராதிகா கழுத்தில் கோபி தாலி கட்டுவதை தடுக்க ஈஸ்வரி, இனியா, ராமமூர்த்தி  ஆட்டோவில் வந்து மண்டபத்துக்குள் வருவதற்குள் கல்யாணம் நடந்து விடுகிறது. அம்மாவை பார்த்ததும் கோபி மணமேடையில் இருந்து எழுந்து நிற்கிறார். நான் என்ன கருமத்தை பார்த்துகிட்டு இருக்கேன். நீ இப்படி நான் கனவுல கூட நினைக்கல என ஈஸ்வரி ஆவேசமடைகிறார். இனியாவும் நீங்க என்ன ஏமாத்திட்டீங்க என அழ அவரை சமாதானம் செய்ய கீழே இறங்க முயற்சிக்கிறார் கோபி. 


ஆனால் ராதிகாவும், மயூவும் கையை பிடித்துக் கொள்ள கோபியை அதிர்ச்சியடைகிறார். இதனால் கோபி எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறார். ராமமூர்த்தியும் தன் பங்கிற்கு கோபி மீதும் ராதிகா குடும்பத்தினர் மீது கோபத்தை கொட்டுகிறார். ஆனால் நீங்க என்ன  சாபம் கொடுத்தாலும் நாங்க நல்லா இருப்போம் என கோபி தெரிவிக்கிறார். 


இதைக்கேட்டு கடுப்பாகும் ஈஸ்வரி எந்த தாயும் பெத்த புள்ளைக்கு சாபம் கொடுக்கமாட்டா. நான் சொல்றேன். நீ நல்லாவே இருக்க மாட்ட, நீ வீட்டை விட்டு வெளிய  வந்தப்ப நான் பாக்யாவை அப்படி திட்டுனேன். ஆனால் அவ தான் உன்னை சரியா புரிஞ்சி வச்சிருக்கா. நீ எவ்வளவு பெரிய அயோக்கியன்னு அவ தெரிஞ்சி வச்சிருக்கா என தெரிவிக்கிறார்.  உடனே கோபி அம்மா என அழைக்க உனக்கு எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. நீ எனக்கு மகனே இல்ல என கூறுகிறார். 


அதற்கு கோபி நான் சட்டப்படி விவாகரத்து ஆயிடுச்சுன்னு தான் இந்த கல்யாணம் பண்ணேன்னு சொல்ல, கல்யாண வயசுல குழந்தைகளை வச்சிக்கிட்டு இப்படி பண்ணலாமா என அவரது குடும்பத்தினர் அசிங்கப்படுத்துகின்றனர். திருப்பி பேசும் ராதிகா குடும்பத்தினரையும் அடக்குகின்றனர். அப்போது அங்கு வரும் பாக்யா, ஈஸ்வரியை சமாதானப்படுத்துகிறார். மேலும் கோபியிடம் ஈஸ்வரி இனி நீ எங்களுக்கு தேவையில்லை. பாக்யாவையும், குழந்தைகளையும் நாங்க பாத்துக்குறோம் என ஆவேசமாக சொல்லிவிட்டு அங்கிருந்து செல்கிறார். 


இதையெல்லாம் கேட்டு கோபப்படும் ராதிகா, ரூமுக்குள் செல்கிறார். அவரிடம் கோபி மன்னிப்பு கேட்டு பின் அனைவரும் வீட்டுக்கு செல்ல முடிவு செய்து வெளியே வருகின்றனர்.அப்போது மாடியிலிருந்து பாக்யா பார்க்க, அவரை வெறுப்பேற்ற ராதிகாவின் கையை பிடித்துக் கொண்டு கோபி பார்க்கும் காட்சியோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.