விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி ( Baakiyalakshmi ) தொடரின் இன்றைய எபிசோடில் ரவுடிகள் இனியாவை சுற்றி வளைக்க, பயத்தில் பதட்டத்துடன்  நிற்கிறான் இனியா. அங்கே வந்த பாக்கியா ரவுடிகளை மிரட்டி இனியாவை பத்திரமாக ரூமுக்கு அழைத்து செல்கிறாள். இனியா அப்படியே பாக்கியாவை பிரமிப்புடன் பார்க்கிறாள். 


 



ரூமில் ஈஸ்வரி, பாக்கியா இனியா மற்றும் செல்வி மிகவும் ஜாலியாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள். “நாமும் அடிக்கடி இது போல லேடீஸ் மட்டும் டூர் சென்றால் நன்றாக தான் இருக்கும். வீட்டுக்குளேயே இருப்பதால் எதுவும் தெரியவில்லை. இனியாவிடம் அடுத்த தடவை உன்னை எப்போ வெளி ஊருக்கு அனுப்புவாங்க” எனக் கேட்கிறார் ஈஸ்வரி.


"நமக்கு எப்போ தோணுதோ அப்போ கிளம்ப வேண்டியது தான். நம்ம எதுக்கு அடுத்த அசைன்மெண்டுக்காக காத்திருக்கணும்" என பாக்கியா சொல்கிறாள்.  ஈஸ்வரியா இது என அனைவரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். அனைவரும் சந்தோஷமாக பேசி சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். 


 



கணேஷ் தனது அம்மா அப்பாவுடன் பேசிக்கொண்டு இருக்கிறான். தொடர்ந்து அமிர்தாவைப் பற்றியே கேட்டு கொண்டு இருக்க கணேஷின் அம்மா - அப்பா அமிர்தா பற்றின உண்மையை மறைக்கிறார்கள். "நீ இறந்து விட்டதாக நினைத்து அமிர்தாவை அவங்க அப்பா அம்மா அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க" என சொல்கிறார்கள்.


"அமிர்தா என்னுடைய பொண்டாட்டி. அவளை ஏன் நீங்க அனுப்புனீங்க. நான் போய் அவளை கூட்டிட்டு வருகிறேன்" என கணேஷ் சொல்ல, "நீ போனாலும் பிரயோஜனம் இல்லை. அவங்க யாரும் இந்த ஊர்ல இல்ல. குடும்பமா எல்லாரும் சென்னையில செட்டிலாகிட்டாங்க. அவங்க போன் நம்பர் கூட எங்களுக்கு தெரியாது" என சொல்லி சமாளிக்கிறார்கள் கணேஷின் அப்பா அம்மா.


"சரி பா கண்டுபிடிக்கலாம். நீ போய் தூங்கு" என சொல்லி கணேஷை அனுப்பி வைக்கிறார்கள். அமிர்தா பற்றின ஏதோ உண்மையை அவர்கள் மறைக்கிறார்கள் என்பது மட்டும் கணேஷுக்கு தெரிய வருகிறது. 


அமிர்தா கனவில் கணேஷ் வந்து கழுத்தை நெரிப்பது போல தூங்கும் போது கனவு கண்டு அலறுகிறாள். அவளை சமாதானம் செய்து எழில் தூங்க வைக்கிறான். பாக்கியாவும் மற்றவர்களும் வெளியில் கிளம்பத் தயாராக, பாக்கியா தன்னுடைய பர்ஸை காணவில்லை எனத் தேடுகிறாள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.