பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் மகாசங்கமத்தில் இரண்டு சீரியல்கள் குடும்பத்தினரும் ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டமாக இருக்கும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது. 


ரசிகர்களை கவரும் பாக்கியலட்சுமி 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். குறிப்பாக பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றது. கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து, ராதிகாவுடனான திருமணம் என அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் இக்கதை சென்று கொண்டிருக்கிறது. தற்போது பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் மகாசங்கமம் என காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கிறது. 


ராதிகாவை வெறுப்பேற்றும் கண்ணன் -ஐஸ்வர்யா


கொடைக்கானலுக்கு பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம், ஹனிமூனுக்காக அங்கு வந்துள்ள கோபி -ராதிகா என 3 குடும்பமும் டூர் சென்றுள்ளது. அங்கு பாக்யாவுக்காக கோபியிடம் மூர்த்தி சண்டைக்கு செல்லும் காட்சிகள் இடம் பெற்றது. இன்றைய எபிசோடில் பாக்யா குடும்பத்தால் அவமானப்பட்ட ராதிகா தான் இனியும் பேச்செல்லாம் கேட்டுட்டு இருக்க முடியாது. சென்னை கிளம்பலாம் என கூறுகிறார். ஆனால் கோபி கெஞ்சிய நிலையில் ஒரு நாள் அதே ஹோட்டலில் இருக்க ராதிகா சம்மதிக்கிறார். 


அப்போது வெளியே கண்ணனும் ஐஸ்வர்யாவும் வருகின்றனர். கோபி தங்கியிருக்கும் ரூமை கண்ணன் காட்ட அவரை ஏதாவது செய்யணும் போல இருக்கு என ஐஸ்வர்யா தெரிவிக்கிறார். உடனே பிளான் போட்டு கோபி ரூமுக்குள் செல்லும் ஐஸ்வர்யா எங்க ரூமுக்குள்ள நீங்க இருக்கீங்க என வாண்டட் ஆக வம்பிழுக்கிறார். கோபியும் ராதிகாவும் என்ன நடக்கிறது என புரியாமல் முழிக்க, எத்தனை பேர் வந்தாலும் எனக்கு பாக்கியா தான் அண்ணி என சொல்ல கோபி டென்ஷனாகிறார். கண்ணனும் ஐஸ்வர்யாவுக்கு சப்போர்ட்டாக பிளானை நிறைவேற்ற ராதிகா மீண்டும் கோபமடைகிறார். இதையெல்லாம் பார்த்து உன் நிலைமை ரொம்ப பாவமா இருக்குடா என தன்னைத்தானே திட்டி கோபி நொந்து கொள்கிறார். 


ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் 


பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி குடும்பங்கள் இரண்டும் ஆட்டம், பாட்டம் என சுற்றுலாவை ஜாலியாக கொண்டாடுகின்றனர். எழில், கண்ணன், தனம், மூர்த்தி, இனியா, ஐஸ்வர்யா என அனைவரும் நடனம் ஆட, மறுபுறம் கோபி, ராதிகாவுடன் வெளியே வருகிறார். பாக்யா இருக்கும் இடத்திற்கு ராதிகா போகலாம் என சொல்ல கோபி அதிர்ச்சியடைகிறார். அங்க வேண்டாம். ஏதாவது பிரச்சனையாகும் என கோபி சொல்ல சொல்ல ராதிகா செல்கிறார். பின்னர் பாக்யாவை பாடச்சொல்லி மைக்கை நீட்ட கோபி தன் மனதுக்குள் இவ பெரிய பி.சுசீலா என கடுப்பாவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 


இதற்கிடையில் ஹோட்டல் தொழில் நல்ல வருமானம் வருவதாக முல்லை கதிரிடம் தெரிவிக்கும்  காட்சிகள் இடம் பெறுகிறது. இதில் முல்லையாக நடிகை காவ்யா அறிவுமணிக்கு பதிலாக லாவண்யா நடித்துள்ள காட்சிகள் இன்று முதல் ஒளிபரப்பாகிறது.