பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா காலில் விழுந்து கோபி கெஞ்சும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது. 


ரசிகர்களை கவரும் பாக்கியலட்சுமி 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். குறிப்பாக பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றது. கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து, ராதிகாவுடனான திருமணம் என அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் இக்கதை சென்று கொண்டிருக்கிறது. 


டென்ஷனாகும் பாக்கியா குடும்பத்தினர்


பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் ராதிகாவுடன் இருந்த கோபியிடம் சண்டையிட்ட நிலையில்,அவர்களை எழில் வெளியே அழைத்து செல்கிறார். பின்னர் ராதிகாவை சமாதானப்படுத்துகிறார். வெளியே மூர்த்தியும், கண்ணனும் எழிலிடம் நடந்தவை எல்லாவற்றையும் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். நடுவில் பாக்யா எழிலுக்கு போன் பண்ணி கண்ணன் எங்கே மூர்த்தியை அழைத்து சென்றான் என கேட்கிறார். 


எழில் கோபி வந்த விஷயத்தைச் சொல்ல பாக்யா அதிர்ச்சியடைகிறார். பின்னர் மூர்த்தி, எழில், கண்ணன் அனைவரும் குடும்பத்தினரை சந்தித்து கோபி பற்றி தெரிவிக்கிறார்கள். இதனைக் கேட்டு பாக்கியலட்சுமி குடும்பம் அழ, மீனா, ஐஸ்வர்யா அதிர்ச்சியடைகின்றனர். பாக்கியா குடும்பத்தினர் தங்கள் வேதனைகளை தெரிவிக்க செல்வி நானும், அக்காவும் தான் அந்த கல்யாணத்துக்கு சமைக்க போனோம் என சொல்ல பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கொதித்தெழுகிறது. 


பின் பாக்யா நாம இங்க இருக்க வேண்டாம். ஊருக்கு போலாம் என எழிலிடம் தெரிவிக்க, ராமமூர்த்தி அதனை  ஏற்க மறுக்கிறார். நாம போயிருவோம். மூர்த்தி குடும்பம் என்ன பண்ணுவாங்க என சொல்லிவிட்டு பாக்யாவின் முடிவை மாற்றுகிறார்.அதன்பின் வேறு ஹோட்டல் பார்க்கலாம். இங்க இருந்தா எல்லாரும் வருத்தப்படுவாங்க என பாக்யா தெரிவிக்க இருவரும் சரி என்கின்றனர்.  இதனைத் தொடர்ந்து கண்ணன் நாம எல்லோரும் இந்த ட்ரிப்பை என்ஜாய் பண்ணுவோம் என சொல்கிறார். 


ராதிகாவிடம் கெஞ்சும் கோபி 


மறுபுறம் ராதிகா என்னால இங்க இருக்க முடியாது என தெரிவித்து பேக்கிங் செய்கிறார். அவரது காலில் விழுந்து கெஞ்சி எனக்காக இங்க இரு என கோபி கேட்கிறார். இவங்களுக்கு மத்தியில என்னால இருக்க முடியாது என சொல்ல,சரி வேற ஹோட்டல் போலாம் என சொல்லிவிட்டு தனது நண்பனிடம் உதவி கேட்கிறார். ஆனால் சீசன் டைம் என்பதால் வேறு ஹோட்டலில் ரூம் கிடைப்பதில் கஷ்டம் என சொல்லி கோபி அதே ரூமில் இருக்க சொல்கிறார். பின் ராதிகாவை சந்திக்கும் கோபி எவ்வளவோ முயன்றும் ரூம் கிடைக்கவில்லை. இங்கேயே இருக்கலாம் என சொல்லி சம்மதிக்க வைக்கிறார். 


மூர்த்தி - கோபி மோதல் 


வெளியே வரும் கோபி மூர்த்தியை சந்திக்கிறார். தன்னுடைய பெர்சனல் விஷயத்தில் தலையிடாதன்னு அன்னிக்கே சொன்னேன்ல என கோபி சொல்ல, தாலி கட்டுறதுக்கு முன்னாடி பாக்யா அக்கா போன் பண்ணியிருந்தா கை, காலை உடைச்சிருப்பேன் என மூர்த்தி சொல்கிறார். இப்படியான காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.