விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் நேற்றைய எபிசோடில் பாக்கியாவுக்கும் கோபிக்கும் இடையில் பழனிச்சாமியை வைத்து பெரிய பிரச்சனை நடுரோட்டில் நடந்தது. அதை லோபிதாவும், பழனிசாமியின் நேரில் பார்த்தனர். அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம். 


பின்தொடர்ந்த பழனிச்சாமி:


கோபியிடம் சண்டை போட்ட பாக்கியா நேரடியாக கேன்டீனுக்கு  வருகிறாள். அவள் பின்னாடியே லோபிதாவும், பழனிச்சாமியும் கேன்டீனுக்கு வருகிறார்கள். "நீங்க அவரோட சண்டை போட்டதை நேரில் பார்த்து விட்டு தான் வருகிறோம். இப்போ நீங்கள் ஓகே தானே?" என்கிறார் பழனிச்சாமி. 


 



"நான் ஓகே தான். யாரோ ஏதோ பேசுனாங்க என்பதற்காக நான் ஏன் கவலை பட வேண்டாம்" என பாக்கிய சொல்ல பழனிச்சாமி பாக்கியாவை பாராட்டுகிறார். லோபிதாவுக்கு தன்னால் தான் இது எல்லாம் நடந்தது என கவலைப்பட்டு சொல்ல பழனிச்சாமியின் நானும் இப்படி எல்லாம் பேசி இருக்க கூடாது என வருத்தப்படுகிறார். மிகவும் கூல்லாக பாக்கியா "இது இல்லாட்டியும் அவர் வேற ஏதாவது ஒரு காரணம் சொல்லி என்கிட்டே சண்டைபோடுவார். அவருக்கு நான் சந்தோஷமாக இருக்க கூடாது. அது தான்" என்கிறாள். 


அசிங்கப்பட்ட கோபி :


அடுத்ததாக கோபி, பழனிச்சாமியின் வீட்டுக்கு சென்று அவருடைய அம்மாவிடம் பேசவிடலாம் என முடிவெடுத்து பயந்து கொண்டே அவர் வீட்டுக்கு செல்கிறார். அங்கே உட்கார்ந்து இருந்த பழனிச்சாமி அம்மாவிடம் லேம்ப்போஸ்ட் இல்லையா எனக் கேட்க, அம்மா அவர் என்னவோ ஈபி ஆபீஸில் இருந்து வந்து இருப்பதாக நினைத்து "கரண்ட் போயிட்டு போய்ட்டு வருது என்னன்னு போய் பாரு" என கூறுகிறார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கோபி நீக்க பழனிச்சாமி அம்மா தானே என கேட்க "ஆமா ஆனா பழனிச்சாமி வீட்டில் இல்லையே" எனக் கூறுகிறார். 


ஸ்ட்ரிக்ட் ஆபீஸர் :


"உங்களை தான் நான் பார்க்க வந்து இருக்கிறேன்" என கோபி சொல்லிவிட்டு "உங்க பையன் ஒரு பொண்ணோட எப்ப பார்த்தாலும் சுத்திக்கிட்டு இருக்காரு" எனச் சொல்கிறார். அதைக் கேட்ட பழனிச்சாமி அம்மா "அப்படியா? யார் அந்த பொண்ணுன்னு சொல்லு உடனே கல்யாணம் பண்ணி வச்சுடலாம்" என சொல்லவும், கோபிக்கு பயங்கர ஷாக். "அவர் என்னோட பொண்டாட்டி பின்னாடி சுத்திகிட்டு இருக்காரு" என சொன்னதும் அம்மாவுக்கு புரிந்தது வந்து இருப்பது பாக்கியாவின் கணவர் என்பது. "நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட், உங்க பையன் கிட்ட சொல்லி வையுங்க இல்லனா வேற மாதிரி ஆயிடும்" என்றதும் ஒன்னும் புரியாமல் நிற்கிறார் பழனிச்சாமியின் அம்மா.  


 



ஜெனிக்கு சீமந்தம் எப்போ?


ஜெனிக்கு எப்போ சீமந்தம் பண்ணலாம் எனக் கேட்டு தெரிந்து கொள்வதற்காக ஜெனியின் அம்மா பாக்கியாவின் வீட்டுக்கு வருகிறார். பாக்கியாவும், ஈஸ்வரி வந்ததும் நல்ல நாள் பார்த்து சொல்வதாக கூறுகிறாள். அப்போது செழியன் சீமந்தம் முடிந்ததும் ஜெனி இங்கேயே இருக்கட்டும் என சொல்கிறான். ஜெனியும் அதையே சொல்ல, ஜெனி அம்மா " எனக்கு உன்னை பார்த்துக்கணும் என ஆசையா இருக்காதா? அதற்கு இது தான் சரியான சான்ஸ்" என சொல்கிறார். ராமமூர்த்தி செழியனைக் கூப்பிட்டு “அன்னைக்கு என்னை மட்டும் கிண்ட பண்ண? இப்போ தெரியுதா அந்த கஷ்டம் என்னனு?” என்கிறார். 


பழனிச்சாமி வீட்டுக்கு வந்ததும் அவருடைய அம்மா கோபி வந்த போன விஷயத்தை பற்றி சொன்னதும் அவர் அதிர்ச்சி அடைகிறார். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.