ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். 


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அம்மனுக்கு மிளகாய் அறைத்து பூசும் சடங்கில் பழனிக்கு உடம்பு எரியத் தொடங்க, அவனது கையில் இருப்பது தான் போலி பத்திரம் என்று என்று தீர்ப்பளித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.


அம்மனின் அருளால் வெற்றி கண்ட அமுதா கதிரேசன் ஃபோட்டோ முன் நின்று நன்றி சொல்கிறாள். அடுத்து மாயா இரவு செந்திலின் நிலம் இருக்கும் இடத்திற்கு வந்து ஒரு சாமி சிலைய எடுத்து நிலத்தில் தோண்டி புதைத்து வைக்கிறாள். மறுநாள் காலை நிலத்தை அளப்பதற்காக சர்வேயர்களுடன் செந்தில் குடும்பத்தினர் மற்றும் சேட்டு வருகின்றனர். இதையெல்லாம் மாயா மறைந்து நின்று பார்க்கிறாள். 


கொஞ்ச நேரத்தில் மாயா ஒரு பெண்ணை கண்ணைக் காட்ட, அந்தப் பெண் திடீரென சாமியாடி “இது ஆத்தாவோட இடம் , நான் ஆத்தா வந்திருக்கேன், நான் இருக்குற இடத்தை எப்படிடா நீங்க விக்கலாம்? இது என் இடம் தான்னு நிரூபிக்கட்டுமா?” என கேட்டபடி ஒரு இடத்தை காட்டி, “இங்க தோண்டுங்கடா” என்று சொல்ல ஆட்கள் அதைத் தோண்டி பார்க்க, உள்ளே சாமி சிலை இருக்கிறது.


இதனால் சேட்டு மாணிக்கத்திடம் “ஆரம்பத்தில் இருந்து இந்த இடத்தை வாங்குறதுல பிரச்சனை இருக்கு, இதுக்கு மேல இந்த இடம் வேண்டாம் என சொல்லிவிட்டு கிளம்ப, மாயா அதைப் பார்த்து  சிரித்துக் கொள்ள,
வடிவேல் நடந்தவற்றை பழனி, உமாவிடம் சொல்ல இருவரும் அந்த வீடு நம்ம கைக்கு வந்துரும்” என சந்தோஷப்படுகின்றனர்.


இங்கே அமுதா, மாணிக்கம், செந்தில் வீட்டுக்கு வர, அன்னம் பணம் கிடைச்சிடுச்சா என கேக்க, மாணிக்கம் நடந்தவற்றை சொல்ல, இது எல்லாம் அந்த பழனியோட வேலை தான் என சொல்கிறாள். செந்தில் ரூமில் அமர்ந்திருக்க, அவன் முன்னால் பாம்பு ஒன்று நின்று கொண்டிருக்க, அமுதா சத்தம் போட்டு அனைவரையும் கூப்பிடுகிறாள். அனைவரும் பயந்து போய் நிற்க, மாயா வந்து பாம்பை பிடித்து தூக்க, அமுதா ஷாக்காகி நிற்க, மாயா பாம்பை தூக்கி போடப் போக பாம்பு மாயாவை கொத்தி மயங்கி விழுகிறாள். 


இப்படியான நிலையில் இன்றைய அமுதாவும் அன்னலட்சுமியும் எபிசோட் நிறைவடைகிறது.