தமிழ்நாட்டில் கொரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக கடந்த மே 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என்று பல கட்டங்களாக அமல்படுத்தப்பட்டு வந்த இந்த ஊரடங்கில் தற்போது வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில், தமிழ்நாட்டின் தற்போதைய கொரோனா சூழலுக்கேற்பட ஊரடங்கை நீட்டிக்கலாமா? கூடுதல் தளர்வுகள் அளிக்கலாமா? அல்லது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? என்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


பள்ளிகள் திறப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் திரையரங்குகளை திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதனால், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் 50 சதவீத பார்வையாளர்களுடன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.