Jailer: ‘காவாலா’ பாடலுக்கு கிடைத்த அன்பால் திக்குமுக்காடி போயுள்ளேன்... தமன்னா நெகிழ்ச்சி!

‘காவாலா’ பாடல் ஹிட் ஆகி இணையத்தைக் கலக்கி வரும் நிலையில், ரசிகர்களுக்கு தனது இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றி தெரிவித்து கொள்வதாக தமன்னா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Continues below advertisement

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் தமன்னா, ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களை தவிர மலையாள நடிகர் மோகன்லால் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

Continues below advertisement

இதற்கான படப்பிடிப்புகள் அண்மையில் முடிந்த நிலையில், திரையில் வெளியிட படம் தயாராகி வருகிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதி படம் ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி வெளியான ஜெயிலர் படத்தின் ‘ காவலா’ பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. 

இதுவரை 5.6 கோடிக்கும் அதிகமான மக்கள் காவால பாடலை பார்த்துள்ளனர். காவாலா பாடலில் நடனம் ஆடும் தமன்னா மிகப்பெரிய அளவில் வைரலானார். திரையுலக பிரபலங்களும், பொதுமக்களும், சிறுவர்களும் காவாலா பாடலுக்கு நடமாடி வருகின்றனர். இன்ஸ்டா ரீல்சில் இப்போது வரை ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடலாக காவாலா உள்ளது. காவாலா பாடலில் ஒரு சில நொடிகளே ரஜினி வந்தாலும், அவரது ஸ்டைலை ரசிகர்கள் கொண்டாடி வருகிறனர். 

இந்த நிலையில் காவாலா பாடல் குறித்து தமன்னா நெகிழ்ச்சிப்பதிவு ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், காவாலா பாடலுக்கு கிடைத்த அளவற்ற அன்பை தன்னால் நம்ப முடியவில்லை என்றும், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தனது பணிக்கு கிடைத்த மிகப்பெரிய அன்பை பார்த்து மகிழ்வதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது இதயத்தின் ஆழத்தில் இருந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் தமன்னா கூறியுள்ளார். அவரின் இந்த பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola