கொலை செய்யப்பட்டாரா சுஷாந்த் சிங் ?


கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி தோனியின் பயோபிக் படத்தின் மூலம் அனைத்து மொழி ரசிகர்களிடத்திலும் பிரபலமான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையிலுள்ள பாந்த்ரா இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார்.




தற்போது, சுஷாந்த் சிங் உடலுக்கு உடற்கூராய்வு செய்த அறையில் இருந்தவரின் வாக்குமூலம், அது தொடர்பான வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூராய்வுக்காக அவர் உடல் கொடுக்கப்பட்டபோது, அதில், காயங்கள் போன்று பல அடையாளங்கள் காணப்பட்டன என அவர் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூராய்வின் படி, சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.


7000 கோடியை வசூல் செய்த அவதார்




படம் வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில், உலகம் முழுவதும் அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் ரூ.7,000 கோடியை கடந்துள்ளது. இதுதொடர்பான தனியார் நிறுவன அறிக்கையின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை அந்த திரைப்படம் 855.4 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. அந்த மொத்த தொகையில் 601.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வெளிநாட்டு சந்தையில் வசூலாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் இந்த திரைப்படம் ரூ.300 கோடியை வசூலித்துள்ளது.


துணிவு பட ப்ரோமோஷன் 


நேற்று துணிவு படத்தின் ப்ரோமோஷன் வீடியோ ஒன்று வெளியானது. இதில், ஸ்கை டைவிங் செய்யும் கலைஞர்கள் சிலர், ஹெலிகாப்டரில் இருந்து குதித்து துணிவு படத்தின் போஸ்டரை வானத்தில் பறக்கவிட்டனர். 






அந்த போஸ்டரில்,  “31 ஆம் தேதி டிசம்பர் - துணிவு டே ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நாளில் டீசர் வருமா..? ட்ரெயலர் வருமா..? அல்லது வேறு ஏதாவது நிகழ்ச்சி நடைபெறுமா..? என்பது தெரியவில்லை. அதுகுறித்து அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வரவில்லை. 


வாரிசு இசை வெளியீட்டு விழா ப்ரோமோ 


வாரிசு படத்தின் இசை நிகழ்ச்சியை நேரில் சென்று காணமுடியவில்லை என பலரும் வருதப்பட்டனர். அவர்களின் கவலையை போக்குவதற்காக, வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி வருகிற ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1 ஆம் தேதி அன்று மாலை 6:30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் தற்போது வெளியாகிவுள்ளது.






முதல் ப்ரோமோவில், நடிகர் விஜய் ரஞ்சிதமே பாடலை பாடி கொண்டு ஆடுகிறார். பின், செல்ஃபி வீடியோவை எடுத்த அவர், தனக்கு ட்வீட் செய்ய தெரியாது என்றும்,  அட்மினை அழைக்கட்டுமா என்றும் கேட்டார். இரண்டாவது ப்ரோமோவில், ராஷ்மிகா நடனமாடுகிறார். “எவ்வளோ க்யூட்டு.. ஐ லைக் யூ” என்று ராஷ் விஜயை பார்த்து கூறினார்.



சமந்தாவின் புதிய பதிவு 






சமந்தாவின் உடல்நிலை சற்று சரியில்லாத நிலையில், அவர்  நண்பரான ராகுல், அவரை இரும்பு பெண் என குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டார். அதற்கு பதிலளித்த சமந்தா, “ உங்களில் கடினமான போராடுபவர்களுக்கு இந்த பதிவை சமர்பிக்கிறேன். தொடர்ந்து போராடுங்கள்... நாம் முன்பை விட பலமாக ஆகுவோம்... என்றென்றும் பலமாக இருப்போம்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.